tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடலூரில் இஸ்லாமியர்கள் பேரணி

கடலூர், பிப்.19- அரசியல் சாசன அடிப்படை விதிகளுக்கு புறம்பாக மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிறது குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற தேசிய மக்கள் தொகை பதி வேடு ஆகியவை குறித்து தமிழக மக்களின் உணர்வு களை மதித்து அவற்றுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசு நடப்பு சட்ட மன்றக் கூட்டத் தொடரி லேயே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடலூர் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியின் கூட்ட மைப்பு சார்பில் பேரணி நடை பெற்றது.  கடலூர் ஜவன்ஸ் பவன் அருகிலிருந்து மவ்லானா ஏ. ஷபியுல்லாஹ் ஹஜ்ரத் தலைமையில் துவங்கிய பேரணி தலைமை தபால் நிலையம் முன்பு வந்தபோது காவல்துறையினர் இவர் களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.   இந்தப் பேரணியை யொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் துணைத் தலைவர் தலைமையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டி ருந்தனர். மேலும் 2 வஜ்ரா வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபட்டன. மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் இதற்கு அனுமதி மறுத்ததால் பேரணி யாக வந்தபோதே காவல் துறையினர் இவர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.