tamilnadu

img

தண்டவாளத்தில் திடீர் விரிசல் - பெரும் விபத்து தவிர்ப்பு

கடலூர்,பிப்.12- கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் வழியாக பயணிகள், விரைவு ரயில்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.  இந்த நிலையில் கடலூர் முது நகர் ரயில் நிலையம் அருகே ஞாயி றன்று (பிப்.12) காலை வழக்கம் போல் செந்தூர் விரைவு ரயில் திருச்செந்தூ ரில் இருந்து கடலூர் முதுநகர் வழி யாக சென்னை நோக்கி சென்றது. அப்போது ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்டதை பார்த்துள்ளனர்.  செந்தூர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது தண்ட வாளத்தில் மாற்றம் இருந்ததை அங்கு பணியில் இருந்த கேட் கீப்பர் பார்வையிட்டு  செந்தூர் விரைவு ரயில் சென்ற பிறகு உடனடியாக நிலைய மேலாளரிடம் தண்ட வாளத்தில் விரிசல் தொடர்பாக தகவல் கொடுத்தார்.  

இதனை தொடர்ந்து ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக ரயில்வே  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்தனர்.  அப்பொழுது விழுப்புரத்தில் இருந்து காலையில் தினந்தோறும் மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் உடனடியாக பயணிகள் ரயிலை பாதி வழியில் நிற்க வைத்தனர்.  பின்னர் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை தற்காலிகமாக சரி  செய்தனர். மேலும் இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் குறைந்தபட்சம் 20 கிலொ மீட்டர் வேகத்தில் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டன. மேலும் சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு பயணிகள் ரயிலை மெதுவாக இயக்க வைத்து அனுமதித்தனர். மேலும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது  ஏன்,  சதியா அல்லது எதிர்பாராமல் தண்டவாளத்தில் விரிசில் ஏற்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ஊழி யர்கள் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.