நாகர்கோவில், செப். 2- கேரள மக்களின் பிரதான பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாட்டம், அத்தம் நட்சத்திர தினமான திங்களன்று அந்த மாநிலம் முழுவதும் துவங்கியது. இந்நிலையில் தமிழக - கேரள எல்லையில் இருக்கும் குமரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதி களில் ஓணம் கொண்டாட்டம் தொட ங்கியது. குழித்துறையில் ஓணம் கொண்டாட்டம் தொடங்கியதை யடுத்து அனைவரும் புத்தாடை யுடன் மஞ்சள் நிறத்தில் ஓணக்கோடி என அழைக்கப்படும் சால்வாய் மற்றும் புத்தாடை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு, ஓண ஊஞ்சல் கட்டி கொண்டாடினர். பத்தாம் நாள் திருவோணம் பண்டிகை நடைபெற உள்ளது.