tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் இடுவாய் ஊராட்சி மக்களுக்கு நிவாரண உதவி

திருப்பூர், மே 16 – கொரோனா ஊரடங்கு காலத் தில் திருப்பூர் இடுவாய் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு, உதவும் மனம் படைத்த நன்கொடையா ளர்கள் மூலம் அரிசி, காய்கறி, எண்ணெய் சேகரிக்கப்பட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான ஊராட்சி நிர்வாகம் நிவா ரண உதவிகள் வழங்கியது. கொரோனா பெருந்தொற்று பர வல் தடுப்பாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதி களிலும் வேலை, வருவாய் இழந்து ஏழை, எளிய மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலை யில் இடுவாய் ஊராட்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான ஊராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு அரசு மூலம் கிடைக் கும் நிவாரண உதவிகள் முறை கேடில்லாமல் கிடைப்பதற்கும், அப் பகுதியில் வசிக்கும் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் முக்கியப் பிரமு கர்கள், நன்கொடையாளர்கள் மூலம் உதவிகள் பெற்று பொது மக்க ளுக்கு விநியோகம் செய்ய முனைப் ப்புடன் செயல்பட்டனர்.

இடுவாய் ஊராட்சி மாருதி நக ரில் வாழும் மக்களுக்கு, விஐபி நகர் நண்பர்கள் உதவியின் மூலம் 275க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.  இந்த ஊராட்சி பகுதிகளில் ரேஷன் கார்டு இல்லாத, அதேசமயம் இடு வாய் கிராம ஆதார் விலாசம் கொண்ட சுமார் 150 குடும்பங்களுக்கு சீராணம்பாளையம் மார்க்சிஸ்ட் கட்சி கிளை அலுவலகத்தில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இடுவாய் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் எண்ணெய் ஆகியவை ரைஸ்மில் பகுதியிலுள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. 

இடுவாய் பாரதிபுரம் பள்ளிக்கு தெற்குப் பகுதியில் 250க்கும் மேற் பட்ட குடும்பங்களை சேர்ந்த மக் களுக்கு  எஸ்.சி.எம். சென்னை சில்க்ஸ் உதவியுடன் அரிசியும், இடு வாய் அண்ணாமலை கார்டன் பிர முகர்களின் உதவியுடன் சமையல் எண்ணெயும் பெறப்பட்டு பொதுமக் களுக்கு வழங்கப்பட்டது. அதே போல் பாரதிபுரம் பகுதியில் சுமார் 350 குடும்பங்களுக்கு பாரதிபுரம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் எண்ணையும், அரிசியும் வழங்கப்பட்டது.  திருவள் ளுவர் நகர் மக்களுக்கும், அங்காள பரமேஸ்வரி நகர் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும் பத்தினருக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் நகர் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்திலும், அங்காள பரமேஸ் வரி நகர் கோயில் வளாகத்திலும் இவ் வுதவி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த ஊராட்சியில் காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகிகள் உள் ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சார்பாக 250க்கும் மேற்பட்ட குடும்பத்தை சார்ந்த பொதுமக்களுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருள்கள் வழங் கும் நிகழ்ச்சி இடுவாய் காமாட்சி யம்மன் கோவில் முன்பு நடைபெற் றது.

தூய்மைப் பணியாளர்களுக்குச் சீருடை

இடுவாய் ஊராட்சியில், பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கே. கணேசன், துணைத் தலைவர் எஸ்.பரமசிவம் ஆகியோர் சீருடைகள் வழங்கினர். இதில் ஊராட்சிமன்றச் செயலர் கே.ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிவாரண உத விகள் சேகரித்து வழங்கும் பணிக்கு இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் தலைமை ஏற்று முன் முயற்சி எடுத்து செயல்பட்டார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப் பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, கட்சிக் கிளைச் செய லாளர்கள் ஈஸ்வரன், கே.கருப்புசாமி, குமாரவேல் உள்பட மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு அமைப்பின் நூற் றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அர்ப் பணிப்பு உணர்வுடன் பங்கேற்றனர். மேலும், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பரமசிவம், மார்க் சிஸ்ட் கட்சி வார்டு உறுப்பினர்கள் சர்மிளா செல்வராஜன், ஈஸ்வரி உள்ளிட்டோரும் நிவாரண உத விகள் வழங்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இடுவாய் கிராம ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் நிதி மற்றும் உணவுப் பொருட்கள் வழங் கினர். விஐபி நகரை சார்ந்த ஜி.வெங்கடாசலம், விக்ரம், குமரன் மஹால் உரிமையாளர் அங்கமுத்து, ஏ.பாலகணேசன், சின்னகாளி பாளையம் முருகசாமி, ராஜ் (எஸ்.எஸ்.எம்), சின்னாண்டிபாளையம் சோமசுந்தரம், பாரதிபுரம் கார்த்தி, சுரேஷ், ராஜசேகரன், சக்திவேல், ரமேஷ், குமார், சிஐடியு சுரேஷ், அந்தோணி, திருவள்ளுவர்நகர் பழனிச்சாமி, சின்ராஜ், பிரபாகரன், ரமேஷ், நாகஜோதி, ஊர் நாட்டாமை குமாரசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகசாமி, கோவில் கமிட்டி பிரமுகர்கள் சொக்கப்பன், குமரப்பன், கோபால், எஸ்.சி.எம் நிறு வன ஜெகநாதன், லேபிள் வெள் ளியங்கிரி, காமாட்சி அம்மன் கோவில் கமிட்டி உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி முக்கிய பிரமுகர் கள் கலந்து கொண்டனர்.