லாக் டவுன் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தால், 8.2 லட்சம் பேருக்கு மேல் கொரோனா நோய் தொற்று பரவி இருக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சக இணை செயலா ளர் லாவ் அகர்வால் ஏப்ரல் 11ம் தேதி அன்று தெரிவித்தார். அதற்கு முதல் நாள் பத்திரிகையாளர் சந்திப்பில் அதே செய்தியை மறுத்தவர் அவர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்று சொல்வதாக இந்தச் செய்தியை முதலில் வெளியிட்டவர், பா ஜ க.வின் ஐ டி துறை பொறுப்பா ளர் அமித் மாளவியா. அப்படி எந்த ஆய்வையும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொள்ளவில்லை என்று மறுத்த லாவ் அகர்வால், அவசர அவசரமாக மறுநாளே பத்திரிகையா ளர் சந்திப்பைக் கூட்டினார். அதே 8.2 லட்சம் புள்ளிவிவரத்தை இப்போது அவர் வெளியிட்டார். புத்திசாலிகளான நிருபர்கள் அவரை மடக்கியபோது, கவுன்சில்தான் அப்படி ஆய்வு செய்யவில்லை என்று சொன்னதாகவும், வேறு சில ஆய்வுகள் இந்தப் புள்ளிவிவரத்தை உறுதி செய்வதாகவும் (அத்தகு ஆய்வுகள் எதையும் பெயர் குறிப்பிடாமல்) சொல்லி வணக்கம் போட்டு அனுப்பிவிட்டார்.
இவ்வளவு விரிவான விவரங்கள் இல்லாமல், இந்தப் புள்ளிவிவரங்கள் மட்டுமே ஊடகங்கள் வழியே மக்களை வேகமாகச் சென்று சேர்ந்துவிட்டன. லாக் டவுன் இருந்ததால், இத்தனை லட்சம் பேர் காப்பாற்றப் பட்டனர் என்று தலைப்புச் செய்தி நாடு முழுவதும் போய்ச்சேர்ந்து விட்டது! நீங்கள் இதற்குமேல் கேள்வி கேட்க முடியாது. ‘தேச பக்தர்கள்’ ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்பதில்லை. சாதாரண காலத் திலேயே கேள்வி கேட்பது அத்தனை நல்லதற்கில்லை.
இந்தப் புள்ளிவிவரம், கிருமி தொற்று பரவல் தொடங்கிய காலத்திலிருந்த வேகத்தை அப்படியே தொடர்ச்சியான கதி யில் நீட்டித்துக் கணக்கிட்டுச் சொல்லப்பட்டது. அதைக் கேள்விக்கு உட்படுத்திய ஒருவர், கிரிக்கெட்டில் முதல் ஓவரில் பத்து ரன்கள் அடிக்கப்பட்டிருந்தால், ஐம்பது ஓவர்களில் 500 ரன்கள் குவிக்கப்படும் என்று சொல்வதைப் போன்றது என்று அதை வருணித்தார். இதெல்லாம் எல்லோரது பார்வைக்கும், வாசிப்புக்கும் போகாது. அடுத்து, அன்றாடச் செய்தி வெளியீட்டிலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொடுக்கும் புள்ளிவிவரம் ஒன்றாக வும், அரசு தரப்பில் சொல்லப்பட்டது மிகவும் குறைக்கப்பட்ட எண்ணிக்கையுமாக வழங்கப்பட்டு முரண்பாடு மீண்டும் வெளிப்பட்டது. ஆனால் நீங்கள் கேள்வி கேட்க முடியாது.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் எவ்வளவு பாதுகாப்பற்ற, ஆபத்தான சூழலில், உருப்படியான முக கவசம் கூட வழங்கப்படாமல், இடையறாது தங்கள் கடமையை ஆற்றுகிறோம் என்ற மெய்ப்பொருளை உரைத்தார் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்.
நாள் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் சம்பளம். ‘தங்கள் சம்பளத்தில் 30 சதவீதம் குறைத்துக் கொண்டதாக பெருமை யாக ஆட்சியாளர்கள் பேசுகின்றனர், எங்கள் சம்பளம் என்ன என்று அவர்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார். வழக்கமாக வீதிகளில் எங்கேனும் வீட்டில் நின்று கேட்டால் குடிக்கத் தண்ணீர் தருவோரும் இந்த கொரோனா காலத்தில் விரும்புவதில்லை, அதற்கும் திண்டாடும் நிலைமை. முப்பது பேர், நாற்பது பேரை அடைத்துக் கொண்டு போய் வேலை இடங்களில் இறக்கி விட்டு, அங்கே இடைவெளி விட்டு நிற்கச்சொல்லி அதை புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள் வார்கள் அதிகாரிகள் என்றார். உடன் அழைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி கிறிஸ்து தாஸ் காந்தி, இவர்கள் எல்லாம் கொத்தடிமைகளாக நடத்தப்படுபவர்கள் என்று விளக் கினார். ஆனால், இதெல்லாம் யாரும் கேட்க முடியாது.
டைட்டானிக் கப்பலில் எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கும் வரையில் பணியாளர்கள் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பார்கள். பாறையில் மோதி நொறுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தப்பித்தலுக்கான பாதையில் அவர்களுக்கான முன்னுரிமை என்ன, உயிர் தப்பிக்க அவர்கள் எப்படி அடித்துக் கதறிக்கொண்டு நிற்பார் கள் என்பதை அடுத்த முறை அந்தத் திரைப்படம் பார்க்கை யில் கவனியுங்கள். அந்த முறையில்தான் உழைப்பாளி மக்கள் இந்த லாக் டவுன் காலத்தில் நடத்தப்படுகின்றனர்.
வார்த்தைக்கு வார்த்தை சோசியல் டிஸ்டன்சிங் என்று பிரதமர் பேசியது பண்பலை வரிசை உள்பட எல்லா ஊட கங்களிலும் திரும்பத் திரும்ப உச்சரிக்கப் படும்போது அழு வதா, சிரிப்பதா என்று புரிவதில்லை. புலம் பெயர்ந்து வேறெங்கோ பிழைக்கப் போனோர், சொந்த ஊரிலும் கதியற்றுக் கிடப்போர், எங்கே போவது என்று அலைமோதிக் கொண்டிருப்போர் என கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கிறது ஜனத்திரள். நோய்க்கிருமியா, பட்டினியா - எதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்பதைத் தவிர அவர்கள் தேர்வு செய்ய என்ன இருக்கிறது?
ஆனால், நீங்கள் கேட்க முடியாது.
இந்து நாளிதழ் முன்னாள் ஆசிரியர், சுதந்திர பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் அவர்க ளது ‘வயர்’ இணையதள இதழில் வந்த கட்டுரை மற்றும் அவர் டுவீட் செய்தவற்றுக்காக உத்தர பிரதேச காவல் துறை அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறது. மாற்றுக் கருத்துக்கான காலம் அல்ல இது என்று உரத்து அறிவிக்கின்ற னர் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்.
ஆனால், வாட்ஸ் அப் குழுவில் அவர்கள் என்னமும் எழுத லாம், பரப்பலாம், பதிவுகள் போடலாம்; அதை மறுத்தோ, அம்பலப்படுத்தியோ, கேள்விகள் எழுப்பியோ வேறு யாரே னும் பதிவு செய்தால் அத்தனை கோபம் பொத்துக்கொண்டு வருகிறது அட்மின்களுக்கு. அடுத்த நொடி, மாற்றுக் குரல் எழுப்பியவர் குழுவிலிருந்து வெளியேற்றப்படுவார். அவரை ஆதரிப்போர் வேறு யாரேனும் இந்தக் குழுவில் இருந்தால் அவர்களும் வெளியேறி விடலாம் என்று வெளிப்படையாக மிரட்டவும் செய்யப்படுகிறது. ஆனால், நீங்கள் கேட்க முடியாது.
எத்தனை பேருக்கு சோதனை நடத்தப்பட்டது, திடீர் என்று பெருகும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகள் உள்ளனவா, மருத்துவர்கள் உள்ளனரா, மருத்துவ டீம்களுக்கு கவச உடைகள் உள்ளிட்டு உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறதா, ஆங்கில மருத்துவ முறையில் நிவாரணி இல்லை என்றான பிறகு, மாற்று மருத்துவ முறைகளையும் பரிசோதிக்கவோ, பயன் படுத்தவோ, மாற்றங்களை ஆய்வுக்கு உட்படுத்தவோ, மேம்பட்ட முடிவுகள் எட்டினால் அவற்றை பரவலாக்கவோ முனைப்பு உண்டா என்றெல்லாம் உங்களுக்கு கேள்வி தோன்றுகிறதா...அப்படியே விழுங்கி விடுங்கள். ஏனென்றால், தொண்டையில் நிறுத்திக் கொண்டிருந்தால், கரகரப்பு ஏற்பட்டு, இருமினால் நீங்கள் ஆட்சிக்கு எதிராகச் செருமுவதாக வழக்கு தொடுக்கப்படலாம். யார் கண்டது, கோவிட் பாசிட்டிவ் வார்டு மருத்துவமனையில் இருப்பது போலவே, அரசியல் நெகட்டிவ் வார்டு என்று ஒன்றை காவல் நிலையத்திலோ, வேறெங்கோ உருவாக்கி அப்படியான ஆட்களுக்கு அங்கே உரிய சிகிச்சை(?) வழங்கப் படலாம். (ஏற்கெனவே அர்பன் நக்சல் வார்டு இருப்பதை அறிவீர்கள்).
சாதாரண காலத்தில் அன்றாட அவ சரங்களில், அவஸ்தைகளில் ஆழ்ந்து போயிருக்கும் மக்களிடம் உள்ளடங்கிப் போயிருக்கும் அரசியல் உணர்வுகளை, தத்துவார்த்தக் கேள்விகளை, எது சரி, எது தவறு என்ற விவாதங்களை, எல்லோருக்குமான நல்வாழ்வு என்ற தேடலை, இந்த ஊரடங்கு நேரம் மேலெழுப்பிக் கொண்டு வருகிறது. அவர வர் முயற்சி, விருப்பம், ஆர்வம், அனுபவத்தின் தன்மைக்கு ஏற்ப இந்த விஷயங்கள் பிடிபடும். ஆனால், அது கூட நிகழ்ந்துவிடக் கூடாது என்ற பதட்டத்தை, டொனால்டு டிரம்ப் எப்படி அமெரிக்க அரசியலில் பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாரோ, இங்கு அதன் இந்துத்துவ சாயலைப் பார்க்க முடியும்.
அராஜக லாப வெறி, சந்தைப்படுத்தலுக்கு ஆட் படுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்படும் பொருளாதாரங்கள், காவு வாங்கப்படும் சாமானியர்களது வாழ்க்கை, பேரம் பேசப்படும் வர்த்தக சூதாட்டம், சிதைக்கப்படும் மனித உறவு கள், பண்டமாக்கப்படும் கலை இலக்கியங்கள், ஆயுதக் குவிப்பு, இராணுவத் திமிர் எல்லாம் ஒரு கிருமி தாக்குத லுக்கு எதிராக என்னவும் செய்ய முடியாமல் எப்படி கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறது, அதற்கு மாற்று சக்திகள் நிலைமையை எப்படி கையாண்டு மக்கள் உயிர் காக்கும் வரிசையில் முன்னணியில் இயங்கி கொண்டிருக் கின்றனர் என்பதன் பெரிய காணொலிக் காட்சியாக கொரோ னா காலம் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஊரடங்கு நேரத்தில், மக்கள் நடமாட்டம் இல்லை, சாலை யில் வாகனங்கள் ஓடுவதில்லை, ஆலைகள், தொழிற்சாலை கள் இயங்கவில்லை, எனவே சுற்றுச் சூழல் தூய்மையாகக் காட்சி அளிக்கிறது, பறவைகள் உற்சாகக் குரல் எழுப்பு கின்றன, இயற்கை தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கி றது என்று இன்றைய சூழல் வருணிக்கப்படுகிறது. அதே போல் மனங்களும் மாசற்று சமூகத்தை உற்று நோக்கவும், விடியலை நோக்கி சிந்திக்கவுமான சூழலும் இது. நம்பிக்கைக்கான காலமும் இது.