விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு
சென்னை, நவ. 28- தமிழக அரசு மருத்துவமனை களுக்கு வழங்கப்படும் ஊசிகளின் தரம் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவமனை களில் வரும் நோயாளிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுவது இயல்பு. ஆனால் தற்போது நோயாளி களுக்கு ஊசி போடும்போது அவர்க ளின் உடலுக்குள் ஊசி ஒடிந்து புகுந்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இது தமிழக சுகாதார நலத் துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டது. எனவே கடந்த சில நாட்களுக்குள், ஊசி ஒடிந்த 5 சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த சுகாதார நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அரசு மருத்து வமனைகளுக்கு வினியோகம் செய் யப்படும் ஊசியின் தரம் எப்படிப் பட்டது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுபற்றி சுகா தாரத்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ஊசி ஒடியும் சம்பவங் கள் எப்போதாவது நிகழ்வதுண்டு. ஆனாலும் அடிக்கடி இதுபோன்ற சம்ப வம் நடப்பதால், அதை விசார ணைக்கு உட்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி யில் நடந்த சம்பவம் தொடர்பாக, நோயாளிக்கு ஊசி போட்ட செவிலி யர் இடைக்கால பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். மற்ற இடங்களிலும் விசா ரணைக்குப்பிறகு, எப்படி தவறு நடந் தது?, பணியில் அஜாக்கிரதையாக இருந்தது யார்? என்பது போன்ற விவ ரங்கள் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று சுகா தாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதுகுறித்து பீலா ராஜேஷ் மேலும் கூறியதாவது:- தமிழகத்தில் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், சிரிஞ்ச் என்று அழைக்கப்படும் ஊசிகளை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தி டம் வாங்குகின்றன. ஊசிகளை வாங்கு வதற்கு டெண்டர் விட்டு தனியாரிடம் இருந்து அவற்றை மருத்துவ சேவைக் கழகம் பெறுகிறது. தற்போது ஊசி ஒடியும் சம்பவங் கள் அடிக்கடி நடப்பதால், வாங்கப்ப டும் ஊசிகளின் தரம் பற்றி விசாரணை நடத்தவும், சோதனை செய்யவும் மருத் துவ சேவைக் கழகத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அரசு மருத்துவ மனைகளுக்கு அளிக்கப்படும் ஊசி களின் இருப்பு மற்றும் தரம் பற்றி மருத்துவ சேவைக்கழகம் ஆய்வு செய்யும். ஊசியின் தரத்திலோ அல் லது ஊசியின் வகையிலோ மாற்றம் செய்ய வேண்டும் என்று மருத்துவ சேவைக்கழகம் கேட்டுக்கொண்டால், அதற்கேற்ற நடைமுறைகளை சுகா தாரத்துறை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவங்கள் குறித்து அரசின் சில மூத்த மருத்துவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:- நோயாளிகளின் தசையின் தடி மன், உடல் எடை ஆகியவை வேறு பட்டிருக்கும். எனவே அதற்கேற்ற வகையில் ஊசிகளை தேர்வு செய்து செலுத்துவது அவசியம். இதற்காக சிறிது, நடுத்தரம், பெரிது ஆகிய 3 வகைகளில் ஊசிகள் உள்ளன. ஊசியின் தடிமன் சிறியதாகவும், ஆனால் அதே நேரத்தில் நோயாளி யின் தசை அதைவிட கெட்டியான தாக இருந்தால், தசைக்குள் ஊசி ஒடிந்து தங்கிவிட வாய்ப்பு அதிகம். ஊசி போடும் நடவடிக்கை சாதாரண மானதல்ல.
அதற்கு தேவையான வெளிச்சம் இருக்க வேண்டும். ஊசி போடுவ தற்கு ஏதுவான மேஜை இருக்க வேண்டும். அது, ஊசி போடும்போது நோயாளியின் உடல் அசைவை கட்டுப் படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான ஆரம்ப சுகா தார நிலையங்களில் கூட இந்த வசதி கள் இல்லை. மருத்துவ சேவைக்கு தேவை யான வசதிகளும், உபகரணங்களும் இருப்பதில்லை என்பதை அரசு டாக்டர் கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதான் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற சம்பவம் நடப்பதற்கு காரண மாக உள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் மருத்துவ அலுவலர்களின் கவனக் குறைவு என்ற ஒரு குற்றச்சாட்டை மட்டும் கூறுவது தவறு. வேறு பிரச் சனைகளும் இருக்கலாம். மருத்துவ சேவைக்கழகம் வாங்கி விநியோ கிக்கும் ஊசிகள், மருந்துகள், உபகர ணங்கள் போன்றவை தரம் குறைந்த தாக இருக்கவும் அதிக வாய்ப்புள் ளது. ஊசிகளை உபயோகிப்பதற்கு முன்பு ஊசிகளின் தரத்தை மருத்துவ அலுவலர்கள் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.