உலக வன்முறை எதிர்ப்பு தினமான நவம்பர் 25 அன்று திருவண்ணா மலையிலும் வடலூரிலும் துவங்கி எழுச்சி நடைபோடுகிறது மாதர் சங்க நடைபயணக் காட்சிகள் நெஞ்சில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பெண்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களை அசை போடச் செய்கின்றன
குழந்தை மணத்திற்கு எதிராக...
இந்து சமூகத்தில் 6,7 வயதுப் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவன் இறந்து விட்டால், வாழ்நாள் முழுவதும் விதவையாக வாழ வேண்டிய கொடுமைக்கு பெண்கள் தள்ளப் பட்டனர். இந்த கொடுமையை எதிர்த்து பலர் போராடினார்கள். 1886 ஆம் ஆண்டில், ஜி.சுப்பிரமணி ஐயர் தன்னுடைய விதவை மகள் சிவப்பிரியம்மாளுக்கு மறுமணம் செய்து வைத்தார். இதன் காரணமாக தன்னு டைய சாதியிலிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டார். தந்தை பெரியாரின் தங்கை கண்ணம் மாளின் மகள், விதவையான போது, அந்த பெண்ணுக்கு தனது குடும்ப உறவுகளை எதிர்த்து, மறுமணம் செய்து வைத்தார்.
திருமண வயதை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தபோது, ‘சாரதா (அல்லது) இந்து பால்ய விவாக மசோதா’ சட்டமாக்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் திருமண வயது சட்டம் 12 லிருந்து 15 வய தாக மாற்றப்பட்டு, தற்போது, பெண்களுக் கான திருமண வயது 18 என்று நடைமுறை யில் உள்ளது
சதிக் கொடுமைக்கு எதிராக...
உலகத்தில் எந்த நாட்டிலும், உடன் கட்டை ஏறும் (சதி) கொடுமை கிடையாது. ஆனால், இந்தியாவில், இந்து சமூகத்தில் சதி கொடுமை என்பது புனிதமானது என்று, கூறப்பட்டது. ராஜாராம் மோகன் ராய் போன்றவர்கள், சதி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று உயர்த்திய குரலால் 1829 ஆம் ஆண்டில் சதி முறையை ஒழித் துக்கட்ட சட்டம் வகுக்கப்பட்டது.
தேவதாசி முறைக்கு எதிராக...
இந்து சமூகத்தில் கோயில்களில் தொண்டு செய்வதற்கு ‘காணிக்கையாக’ பெண்களை நேர்ந்துவிட்டனர். பெருந்த னக்காரர்களின் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்கு இந்த ‘தேவதாசி’ களை பலிகடாவாக்கினர். தேவதாசி முறைக்கு எதிராக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ரமாமணி அம்மாள் ஆகியோரின் தொடர்ச்சியான போராட்டங்கள் பெரும் குர லாய் எழுந்தன. 1942ஆம் ஆண்டு திரு வண்ணாமலை மாவட்டத்தில், பொன்னூ ரில், ராஜலிங்கம் என்பவர் தலைமையில் சுயமரியாதை அல்லது பெண்கள் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் தேவதாசி முறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இப்படி தொடர்ச்சியான போராட்டத் தின் காரணமாகத்தான், முத்துலட்சுமி ரெட்டி தலைமையில், சென்னை மாகாண சட்டமன்றத்தில் தேவதாசி முறைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது.
பெண் கல்வி
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற கேள்விக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேற்கத்திய கல்வியை பெண்கள் கற்க வேண்டும் என்று, முதன்முத லில் சொல்லி, அதை செய்து காட்டியவர் ஜோதிராவ் பூலே. தலித் பெண்களுக்கு இந்தி யாவிலேயே முதன்முதலில் பள்ளிக் கூடத்தை திறந்தவர் சாவித்திரி பூலே. இன்று பெண்கள் 65 சதமானவர்கள் கல்வி கற்கின்றனர். பெண்கள் அனைவரும் கல்வி பெறவேண்டும்.
தீவிரமாகும் வன்குற்றங்கள்
இத்தகைய வரலாறு இருப்பினும், பெண்கள் மீதான வன்குற்றங்கள் குறைய வில்லை. பெண் விடுதலைக்கு எதிரான ஆணாதிக்கச் சிந்தனை, சமூகத்தில் புரை யோடிப் போயுள்ளதே இதற்கு காரணம். வன்குற்றங்களின் உச்சமாக, பெண் குழந்தைகள் கருவிலேயே கொலை செய்யப்படுகின்றனர். அல்லது பிறந்தவுடன் கொலை செய்யப்படுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆண் குழந்தைகள் ஆயிரம் என்றால், பெண் குழந்தைகள் 918 ஆக உள்ளது. திரு வண்ணாமலை மாவட்டத்தில் கருக்கொலை நடந்தபோதும், வேளாண் கல்லூரி மாண விக்கு சில பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோதும் எதிர்த்துப் போராடிய இயக்கம் மாதர் சங்கமாகும். நாடு முழுவதும், தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட இயக்கங்களை நடத்திவரும் மாதர் சங்கம், நவம்பர் 25 வன்முறை எதிர்ப்பு தினத்தில் பெண் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்திட, போதை யற்ற- வன்முறையற்ற தமிழகத்தை உரு வாக்கிட, பணி செய்யும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைத்திட, ஆணவ கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றிடக்கோரி, துவங்கியுள்ள மாபெரும் நடைபயணம், அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளது.
மாதர் சங்க நடைபயணம் வெற்றி பெறட்டும்!
கட்டுரையாளர்: சிபிஎம் மூத்த தலைவர், திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்