சென்னை,பிப்.28- கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட 43 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதியதாக தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்த கங்களுக்கு அறைகலன்களுடன் கூடிய புதிய கட்ட டங்கள் கட்டித்தரப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி 102 கால்நடை மருந்தகங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களை கட்டுவதற்காக 43 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. அதே போல நாமக்கல் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கால்நடை நோய் புல னாய்வுப் பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட 2 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.