சென்னை, ஆக. 7 - படிப்பகமும், நூலகமும்தான் கலைஞருக்கு பிடித்த இடம். ஆகை யால் அங்கேயே அவருக்கு சிலை திறந்துள்ளோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். முன்னாள் முதலமைச்சர் கலை ஞர் கருணாநிதியின் இரண்டா வது ஆண்டு நினைவுநாளை யொட்டி, அவர் பிறந்த ஊரான திருக்குவளையில் அமைக்கப்பட்டு ள்ள அவரது உருவச் சிலையை காணொலிக் காட்சி வழியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 7 வெள்ளியன்று திறந்து வைத்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசு கையில், தான் வாழ்ந்த இல்லத்தில் அன்னை அஞ்சுகம் பேரால் படிப்பக மும், தந்தை முத்துவேலர் பெயரால் நூலகமும் அமைத்தார் கலைஞர். படிப்பகமும் நூலகமும்தான் அவ ருக்குப் பிடித்த இடம் என்பதால் அங்கேயே சிலையும் நிறுவப்பட்டு ள்ளது. கலைஞர் உடல்நலம் பாதிக்க ப்பட்டிருக்கிறார் என்றதும், அவர் படித்த திருக்குவளை ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் அனை வரும் அவர் உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டி நின்றனர். கலை ஞர் மீண்டும் வந்திருக்கிறார். சிலை யாக திருக்குவளையில் எழுந்துள்ளார் என்று கூறினார்.