tamilnadu

img

சூடான் நாட்டு செராமிக் ஆலை தீ விபத்தில் 3 தமிழர்கள் பலி

எரிவாயு டேங்கர் வெடித்துச் சிதறி கோர விபத்து

கார்தோம், டிச.4- எரிவாயு நிரம்பிய டேங்கர் வெடித்துச் சிதறி சூடான் நாட்டு செராமிக் தொழிற்சாலையில் புத னன்று நிகழ்ந்த கோர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 23 பேர் பலி யாகினர். இதில் 3 பேர் தமிழர்கள் ஆவர். சூடான் நாட்டு தலைநகர் கார்தோமில் உள்ள பாக்ரி பகுதி யில் சலூமி என்ற செராமிக் நிறு வனம் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்து வந்துள் ளனர்.  இந்நிலையில் புதனன்று எரி வாயு நிரம்பிய டேங்கர் ஆலையில் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் நிறு வனத்தில் பணியாற்றிக் கொண்டி ருந்த 23 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். படுகாயம டைந்த 130 பேர் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 18 பேர் இந்தி யர்கள் என்பதும் இதில் 3 பேர் தமி ழர்கள் என்பதும் தகவல் வெளி யாகியுள்ளது. 

விபத்து நிகழ்ந்த இடத்தில் தேவையான பாதுகாப்பு கருவி கள் இல்லை என்றும் தீப்பற்றக் கூடிய பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட் டிருந்ததால் எளிதில் தீ பரவி பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின் றன. இந்து விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், சம்பவ இடத்திற்கு இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்துள் ளதாக தெரிவித்தார். விவரங் களை அறிய 24 மணி நேர அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளார்.  இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜசேகரன் , ராஜசேகர், வெங்கடாச்சலம் ஆகியோர் உயி ரிழந்தனர் என்று இந்திய தூதர கம் தெரிவித்துள்ளது.