tamilnadu

img

‘அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே சுடுகாடு’

அரசை வலியுறுத்தி விரைவில் போராட்டம் : தேனியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

தேனி ,செப்.10- ‘அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே சுடுகாடு’ கேட்டு விரைவில் போராட்டம் நடைபெறும்  என்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் என்ற சட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறியுள்ளார். தேனியில் செவ்வாய்க்கிழமை யன்று கட்சி அலுவலகத்தில் செய்தி யாளர்களை சந்தித்து கே.பால கிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் சாதியக் கொடுமை அதிகரித்து வருகிறது. வேலூர் மாவட்டம் நாட்ராம்பாளையத்தில் இறந்து போன தலித் உடலை கொண்டு செல்ல விடாமல் பாலத்தில்  கயிறு கட்டி இறக்கி கொண்டு சென்று ள்ளனர். இது  தமிழ்ச்சமூகத்திற்கு அவமானம். இதை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குக்கு எடுத்துக்கொண்டு விசாரணை செய்த தில், வட்டாட்சியர் தரப்பில் பிரச்ச னைக்கு தீர்வு ஏற்பட்டது என்றும், தலித் மக்களுக்கு ‘தனி சுடுகாடு’ ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் தெரி வித்துள்ளனர் . ‘எல்லோரும் சமம்’ என்று சொல்லிவிட்டு தலித் மக்க ளுக்கு தனி சுடுகாடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.இது அரசியல் சட்டத்தை அரசே அவமதிப்பது ஆகும். தமிழகம் முழுவதும் அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே பொது சுடுகாடு கேட்டு விரைவில் போராட்டம் நடைபெறும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது  அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அது இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜன நாயக  முன்னணி அரசு நிறைவேற்றி யுள்ளது. சமூக நீதிக் கொள்கையை முன்னெடுப்பதாக கூறும் தமிழ கத்தின் மாநில அரசு இதை நிறை வேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் தேனி  மாவட்டச் செயலாளர் டி.வெங்க டேசன்,  மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு , டி.கண்ணன் ,தாலுகா செயலாளர் சி.சடையாண்டி ஆகியோர் உடனிருந்தனர். (ந.நி.)