tamilnadu

img

அச்சு ஊடக செய்தி இதழ் தொழிலுக்கு உடனடி நிவாரண நடவடிக்கை தேவை

பிரதமருக்கு சு. வெங்கடேசன் எம்.பி.,  கடிதம்

மதுரை,மே 27-  கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கால் பெரும் இன்னலை சந்திக்கின்ற  அச்சு ஊடக செய்தி இதழ் தொழிலுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று வலி யுறுத்தி  பிரதமர் நரேந்திர மோடிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் அனுப்பி யுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  எதிர்பாரா சூழலில் இன்று அச்சு ஊடக செய்தி இதழ்கள் சந்தித்து வருகிற பெரும் இன்னல்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர  விழைகிறேன். நமது மாபெரும் ஜனநாயக நாட்டின் நான்காவது தூணாக திகழ்பவை இந்த செய்தி இதழ்கள் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்கிற உண்மை. இன்றைய நெருக்கடி அவற்றின் இருப்பையும், வாழ்வையும் கேள்விக்கு ஆளாக்கியுள்ளது. 

பல செய்தி ஏடுகள் ஏற்கெனவே பக்கங்களை, பதிப்புகளை குறைத் திருக்கின்றன. இருப்பினும் சமூகத் திற்கான தங்களின் தார்மீக கட்டுப்பாட்டை ஈடேற்றி வரு கின்றன. இந்த தொழில் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பைத் தரு கிறது என்பதை சில மதிப்பீடுகள் தெரி விக்கின்றன. இவர்கள் சமூகத்திற்கு விழிப்பை ஊட்டுபவர்களாக இருப்பவர்கள்.  கோவிட் 19 இன் கடும் பாதிப்புகள் விளம்பர வருமானத்தை அறவே இல்லாமல் ஆக்கியுள்ளன. இந்த  நிலைமை இன்னும் நீண்ட காலத் திற்கு தொடருமென்று எதிர்பார்க்க ப்படுகிறது. புதிய யதார்த்தங்கள் நிலை நிறுத்தப்பட்டு அவை வாழ்க்கை முறையாக மாறுகிற காலம் வரை இப் பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஒரு செய்தி இதழை நடத்துவதற்கு விளம்பர வருமானம் மிக அவசிய மானது. ஆதார வளங்கள் இன்மை ஏற்பட்டதால், இதழ் சுற்று எண்ணிக்கையும் சரிந்துள்ளது. 

அச்சு செய்தி இதழ் தொழில் அமைப்புகள் ஏற்கெனவே சில நிவாரண வேண்டுகோள்களை முன் வைத்துள்ளன. அவை மிக மிக நியாயமானவை என்பதால் முழு மனதோடு இந்த கோரிக்கைகளை ஆதரிக்கிறேன்.  அச்சு செய்தித்தாள்  மீதான சுங்க வரியை கைவிட வேண்டும். நிலுவையில் உள்ள அரசு விளம்பர பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். அரசு விளம்பரங்களுக்கு 100 சதவீதம் கட்டண உயர்வை வழங்க வேண்டும்.  அச்சு ஊடகங் களை அரசின் அறிவிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும்.  இரண்டு நிதியாண்டுகளுக்கு வரி விடுமுறை அளிக்க வேண்டும்.  இக் கோரிக்கைகளை விரைவில் ஏற்று நிவாரணம் வழங்குவீர்கள் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.