tamilnadu

img

சிஏஏவிற்கு எதிராக மார்ச் 18-ல் சிறை நிரப்பும் போராட்டம்

சென்னை, பிப்.29- மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மார்ச் 18 அன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரி வித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவை களை திரும்பப்பெறும் வரை யிலும் தமிழகத்தில் இந்த சட்டங் கள் நிறைவேற்றப்படாது என சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற் றும் வரையிலும் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தின் அடுத்த நகர்வாக வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  சார்பில் தமிழகம் முழுவ தும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

;