சிதம்பரம், ஏப்.22- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலையோரத்தில் பசி பட்டினியால் வாடிய குடு குடுப்பை குடும்பங்கள் குறித்து தீக்கதிரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் செய்தி தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு படை யெடுத்தன.
இதற்கிடையில் தீக்கதிர் செய்தியை சமூக வலைதளங்க ளில் பார்த்த சிதம்பரம் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளி யாக பணியாற்றும் சிஐடியு சங்கத்தை சார்ந்த இளங்கோ மற்றும் அவரது மனைவி சித்ரா (மீதி குடி ஊராட்சி வார்டு உறுப்பி னர்) இருவரும் குடுகுடுப்பை குடும்பங்களுக்கு 2 மூட்டை அரிசி, மளிகை காய்கறிகள் என ரூ 5 ஆயிரத்திற்கு வாங்கிக் கொடுத்தனர்.
இதேபோல், சென்னையை மையமாகக் கொண்டு செயல்ப டும் விவசாய தோழமை இயக்கம் சார்பில் சீர்காழி பகுதியைச் சேர்ந்த யாமினி அழகுமலர் ஏற்பாட்டின் பேரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் என ரூ.13 ஆயிரத்திற்கு மளிகை, அரிசி, காய்கறிகளும் வழங்கப் பட்டது. கிள்ளை பிச்சாவரம் பகுதி யில் வசிக்கும் இஸ்லாமிய மக்க ளும் உதவிகள் வழங்கி வரு கிறார்கள். தீக்கதிர் செய்தி எதிரொலி யால் உதவிபொருட்கள் குவிந்து வருவதால் குடுகுடுப்பை குடும் பங்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.