கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம் கிராமம் செந்தமிழ் நகரை சேர்ந்த காலம் சென்ற செல்லமுத்துவின் மனைவியும் பவுனாபதியின் தாயாருமான அஞ்சலை. தனது 120ஆவது வயதில் காலமானார். இவர் பவனாபதி என்ற மகள், அவரது மகன் அன்பழகன், அன்பழகன் மகன் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர் என நான்குதலைமுறைகளை கண்டவர்.இவரது மறைவுச் செய்தி யறிந்து அரசியல் கட்சித் தலைவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் தமிழினி யன், செயலாளர் ராமன் பொருளாளர் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.