திண்டுக்கல், மார்ச் 26 திண்டுக்கல் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஒரு மணி நேரம் அறிவுரை வழங்கினர். மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் மணிமாறன் வாகன ஓட்டிகளை கையெடுத்து கும்பிட்டு அறிவுரை வழங்கினார். அறிவுரையை கேட்ட வர்களில் பெரும்பகுதியினர் மருத்துவமனை, மருந்து கடைகளுக்கு மருந்து வாங்கச் சென்றவர்கள் ஆவர்.
வியாழக் கிழமை என்பதால் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கும் மாத்திரைகளை பெறுவதற்காக வந்தவர்கள் காவலர்களிடம் சிக்கிக்கொண்டனர். தங்களது மருந்துச் சீட்டுகளை காட்டி காவல்துறை அதிகாரி களிடம் கெஞ்சினர். ஆனால் காவல்துறை அதிகாரிகள் அதனை ஏற்கத் தயாராக இல்லை. வழக்கு போடுவதாக மிரட்டினர்?’ அதிலும் சிலர் வழக்கை வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறவே காவல்துறைக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
மதுரை
மதுரை-அலங்காநல்லூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் இருந்த காவலர்கள் மருத்துவமனைக்குச் செல்வோர், பத்திகையாளர்கள் பணிக்குச் செல்ல வேண்டுமென அடையாள அட்டை யைக் காட்டியும் காவல் ஆணையாளர் மதுரை-அலங்காநல்லூர் பிரதான சாலையை முழுவதுமாக அடைக்கச் சொல்லிவிட்டார் என கூறினர். சந்து பொந்துகளுக்குள் நுழைந்து சுற்றிச் செல்லுங்கள் எனக் கூறினர். அவசரத்தன்மை கருதி கூட அனு மதிக்கவில்லை.