சென்னை,ஆக.14- கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகா சத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
கொரோனா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கால் மக்களும் மாணவர்களும் பல்வேறு இன் னல்களை சந்தித்து கொண்டிருக் கின்றனர். இந்நிலையில் மாண வர்கள் பேருந்து வசதியின்றியும், இணையத்தில் பதிவு செய்வதற்கு கட்டணம், விண்ணப்ப கட்டணம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முழுமையான விண்ண ப்பத்தை பூர்த்தி செய்ய இயலாத நிலையும் தொடர்கிறது . அனைத்து மாணவர்களும் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இணையத்தில் பதிவு செய்திருந்தாலும் கூட பல தனியார் கல்லூரிகளில் மாணவர்களை நேரடியாக வரவழைத்து சேர்க்கை நடைபெறுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கும் நிலையும் தனியார் கல்லூரிகளில் தொடர்கிறது. இதில் அரசு தலை யிட்டு சரி செய்திடவேண்டும். அனை வருக்கும் இலவச இணைய சேவை யை உறுதிப்படுத்திய பின்பே ஆன்லைன் கல்வியை நோக்கி செல்ல வேண்டும். அதுவரை பள்ளி மாணவர்களுக்கு தொலைக் காட்சி வாயிலாக வகுப்பு எடுப்பது போன்று கல்லூரி மாணவர் களுக்கும் கல்வி வழங்கிட வேண்டும் . இறுதியாண்டு மாண வர்களுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியரை சந்தி த்து மனு கொடுக்கும் இயக்கம் வெள்ளியன்று நடைபெற்றது.
ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்ட தலைவர் வினிசா, மாவட்டச் செயலாளர் கோபி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். திருவாரூரில் நடை பெற்ற போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், மாவட்டத் தலைவர் ஆனந்த் , மாவட்டச் செயலாளர் சுர்ஜித் ஆகி யோர் பங்கேற்றனர். மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் கண்ணன், மாநகர் மாவட்ட செய லாளர் வேல் தேவா, புறநகர் மாவட்டச் செயலாளர் பிருந்தா, மாவட்ட தலைவர் பாலமுருகன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.