tamilnadu

img

கொரோனா இல்லாத மாநகரானது சேலம்

சேலம், மே 14- கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று  வந்த சேலம் மாநகர் பகுதியை சேர்ந்த 11  பேரும் குணமடைந்து வீடு திரும்பியதன்  மூலம் சேலம் மாநகரம் கொரோனா இல் லாத மாநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநகராட்சி ஆணை யர் சதீஷ் வெளியிட்டுள்ளார். அம்மாப்  பேட்டை, கொண்டாலம்பட்டி மண்டலங் களை சேர்ந்த 11 பேர் கொரோனா பாதித்து  சிகிச்சை பெற்று வந்தனர். தொடர் சிகிச்  சைக்கு பின்னர், அவர்கள் குணமடைந்த நிலையில், 11 பேரும் வீடு திரும்பினர். மேலும், கடந்த 21 நாட்களுக்கு மேலாக மாநகர் பகுதியை சேர்ந்த யாருக்கும் புதி தாக தொற்று ஏற்படாததால், கொரோனா இல்லாத மாநகரமாக சேலம் உரு வெடுத்துள்ளது. அதேசமயத்தில், சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனா தொற்  றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.