சென்னை,அக்.2- மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் ஊரகப்பகுதிகளின் சுகாதா ரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப் பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவை தொ டர்பாக தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2019 மூலமாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி முதல் செப்.5 ஆம் தேதி வரை தனியார் நிறுவனம் மூலமாக நாட்டில் உள்ள 690 மாவட்டங்களில் உள்ள 17ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் 31 ஊரக மாவட்டங்க ளில் உள்ள 800க்கும் மேற்பட்ட பொது இடங் கள்,பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமச் சந்தைகள், வழிப்பாட்டுத் தலங்கள் ஆகிய வற்றில் தூய்மை குறித்த நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிராமப்புறங்களில் பொதுமக்களிடம் தூய்மை குறித்தும் சமுதாய கழிப்பறைகள் குறித்தும் ஆய்வு செய்யப் பட்டது. இதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறவுள்ள விழாவில் இதற்கான விருதை பிரதமரிடமிருந்து மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொள்கிறார்.