tamilnadu

img

கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க ரப்பர் உருளைகள் அமைப்பு

உதகை, டிச. 26- தமிழ்நாட்டில் முதல் முறையாக கல்லட்டி மலைப்பாதை யில் ரப்பர் உருளைகளால் ஆன ரோலர் கேஸ் பேரிங் அமைத்து வாகன விபத்துகளை தடுக்கும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைப்பாதையில் 36  கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மிகவும் ஆபத்தான இந்த மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுபவம் மிகுந்த ஓட்டுநர்களால் மட்டுமே முடியும். போதிய அனு பவமின்மையால் பல விபத்துகள் ஏற்பட்டு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2018 ஆம் ஆண்டு கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அவர்க ளது உடல்கள் சுமார் 52 மணி நேரத்திற்கு பிறகுதான் மீட்கப்பட்டது.

இந்த கோர விபத்தையடுத்து அந்த மலைப்பாதை வழியாக மசினக்குடி, முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்ட வாகனங்கள் மட்டும் இரு புற மும் சென்று வர அனுமதிக்கப்படுகின்றன. பிற மாநில, மாவட்ட வாகனங்கள் மசினகுடியிலிருந்து உதகைக்கு வர அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், கீழ் நோக்கி செல்ல அனுமதியில்லை. இதனால், மசினக்குடி பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள பொதுமக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும், கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதால், கல்லட்டி மலைப் பாதையில் அனைத்து வாகனங்களும் சென்று வர அனு மதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து போராட் டங்களில் ஈடுபட்டனர்.  இதையடுத்து கல்லட்டி மலைப்பாதையில் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அனைத்து வாகனங்களும் சென்று வரும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறையினரால்  ரப்பர் ரோலர் கேஸ் பேரிகார்டு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் மட்டுமே உள்ள இந்த பாதுகாப்பு முறை தற்போது கல்லட்டி மலைப்பாதையில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. 

இதன்மூலம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக செல்லும் வாகனங்கள் இந்த ரப்பர் ரோலர் கேஸ் பேரிகாரிட்டின் மீது மோதும்போது வாகனங்களுக்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 34ஆவது கொண்டை ஊசி வளைவில் ரப்பர் உருளையுடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டு வரு கிறது. இந்த மலைப்பாதையில் உள்ள ஆபத்தான 8 கொண்டை  ஊசி வளைவுகளில் இது போன்ற பாதுகாப்பு ரப்பர் தடுப் புகள் அமைக்க சுமார் ரூ.1 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

;