tamilnadu

img

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

திருவள்ளூர், பிப்.1-  மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருவள்ளூரில் சனிக்கிழமையன்று (பிப்.1) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன் “அடிப்படை ஊதியத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முருகேசன் குழு அறிக்கையை விரிவாக விவாதிக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்,  8 ஆவது ஊதியக்குழு அறிவித்துள்ளதில் 21 மாத நிலுவைத் தொகையை  வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், சித்திக் கமிட்டி அறிக்கையினை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்” என்றார்.  இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் ந.ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

;