சென்னை, ஏப்.16- கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள பகுதிகளை அண்ணா பல்கலைக்கழகத் தின் தொலை உணர் மையத்தின் மூலம் கண்ட றிந்து வரையறை செய்யும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங் களில் 34 மாவட்டங்க ளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள னர். மாநிலம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட வர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது.
மேலும், வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி ஐந்து கிலொ மீட்டர் தூரம் சுற்றளவில் உள்ள மக்கள் கணக்கெடுக் கப்பட்டு, அப்பகுதிகளிலிருந்து மக்கள் வெளி யில் செல்லவோ, வெளியாட்கள் யாரும் உள்ளே வரவோ அனுமதி மறுக்கப்பட்டுள் ளது. இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கை களை மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள் செய்தாலும், நோயாளிக ளின் பகுதிகளை வரையறுப்பது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொலை உணர்வு மையத்தின் மூலம் கணக்கெடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் உள்ள தெருக்கள், வீடுகள் உள்ளிட்ட புவி யியல் வரைபடம் சேட்டிலைட் மூலம் தயார் நிலை யில் உள்ளன.
இதனைப் பயன்படுத்தி நோய் பாதிக்கப்பட்ட வர் வசிக்கும் பகுதியைச் சுற்றி எந்தெந்த தெருக்கள் வருகின்றன, எத்தனை வீடுகள் இருக்கின்றன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தயார் செய்து அளிக்கின்றனர். அதனடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் பாதுகாக்கப்பட்ட பகுதியினை வரையறை செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மைய இயக்குநர் ராம கிருஷ்ணன் கூறும்போது, “அண்ணா பல்கலைக் கழகத்தின் தொலை உணர்வு மையத்தில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களின் புவியி யல் வரைபடங்கள் உள்ளன. அந்த வரைபடங்க ளில் கிராமத்தில் உள்ள தெருக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் செயற்கைக்கோள் வரைபடத்தின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வகை யான வீடுகளும் குறிக்கப்பட்டு, அந்தத் தகவல் பொது சுகாதாரத்துறையிடம் அளிக்கப்படும். அந்த தகவலின் அடிப்படையில் நோய்த்தொற்று உள்ளவர் வசிக்கும் பகுதியைச் சுற்றி, பாதுகாக்கப்பட்ட தூரத்தில் வரும் தெருக்கள் மற்றும் வீடுகளின் விவரத்தினை அளித்து வருகிறோம். அதனையடுத்து, நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை களை அரசுத் துறைகள் மேற்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.