ஆசிபா வழக்கு விசாரணை ஜூன் 3ம் தேதி முடிவடைந்து விட்டது. மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தேஜ்வந்தர் சிங் திங்களன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கு அதிகளவு போராட்டத்தை தூண்டியது என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன.
குற்றப்பத்திரிகையில், முஸ்லீம் நாடோடி இன சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10 ம் தேதி கதுவா மாவட்டத்தில் கடத்தப்பட்டு கோயிலுக்குள் 4 நாட்கள் வைத்து வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது தலை பாறையின் மீது கிடந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிபாவின் உடல் காட்டில் கிடந்தது என ஜூன் 17 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து மைனர் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்வ லைகளை உண்டாக்கியது. இதனால் இந்த வழக்கை குற்றவியல் பிரிவுக்கு ஒப்படைக்கப் பட்டது. முக்கிய குற்றவாளி ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி சஞ்சி ராம் கடந்த ஆண்டு மார்ச் 20 அன்று சரணடைந்தார்.
சஞ்சிராம், அவரது மகன் விஷால் மற்றும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளான தீபக் கஜூ ரியா மற்றும் சுரேந்தர் வர்மா, ஆதாரங்களை அழிக்க முற்பட்ட துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, (சஞ்சிராமின் நண்பர்) மற்றும் தலைமை கான்ஸ்ட பிள் திலக் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவியல் பிரிவின் விசாரணைப்படி கதுவா நகரில் நமாஸ் செய்ய அடிக்கடி வெளியே வருவது குறித்த பயத்தினை உருவாக்கவே சிறுமி ஆசிபா வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பாஜக தலை வர்கள் செளத்ரி லால் சிங் மற்றும் பிரகாஷ் கங்கா ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
கதுவா நீதிமன்றத்தில் ஏப்ரல் 9 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வந்தபோது நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் அதை தடுக்க முற்பட்ட னர். இதனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஜம்மூ- காஷ்மீரில் இருந்து மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் ஜே.கே. சோப்ரா, எஸ்.எஸ் பாஸ்ரா மற்றும் ஹர்மீந்தர் சிங் ஆகியோர் வாதாடினார். கடந்த ஆண்டு சிறுமியின் குடும்பத்தி னர் வழக்கறிஞர் தீபிகா ராஜ்வத்தை வழக்கு குறித்து வாதாடுவதில் நிறுத்திக் கொண்டனர். ஏனெனில் ராஜ்வத் இந்த வழக்கு விசாரிக்கப்படத் தொடங்கியது முதல் கொலை மிரட்டல் வந்து கொண்டே இருப்பதாக கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் குர்தாஸ்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.