tamilnadu

img

நிலுவை வழக்குகள்: விவரம் அளிக்க கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஜன. 16- பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக மாவட்ட நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவ ரங்களை ஒப்படைக்க அனைத்து மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடு, சிறப்பு ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக  9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே அரசின் திட்டங்களை செயல்  படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதால் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்  துறை ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத்யன் தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிறந்த தேதி மாற்றம், பள்ளி முக வாண்மை, நிலம் மற்றும் குற்ற வழக்குகள் நிலுவை யில் இருப்பின் அதன் விவரங்களை இம்மாதம் 19 ஆம்  தேதிக்குள் ஒப்படைக்க அனைத்து மாவட்ட முதன்  மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

;