tamilnadu

img

கீழடி அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சியகம் மதுரையில் திறப்பு

மதுரை, நவ.1- மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம்  வெள்ளியன்று திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  ஐந்தாம்கட்ட ஆய்வில் முதன் முதலாக (அறிவியல் தொழில் நுட்பம்)  புவிகாந்த புவி ஈர்ப்பு விசையை அள விடும் கருவி, ஜிபிஆர் (GPR-Ground penetrating rader) மண்ணிற்குள் கேபிள் மூலம் ஆய்வு செய்யும் கருவி ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை நடைபெற்ற ஐந்து கட்ட ஆய்வில் சமயம் சார்ந்தோ, மதம் சார்ந்தோ எந்தப் பொருளும் கண்ட றியப்படவில்லை. முழுக்க முழுக்க மனித நாகரீகம், அவர்கள் வாழ்க்கை, தொழில் சார்ந்த பொருட்களே கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி களில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஆய்வு மாணவர்கள், நிலம் வழங்கி யவர்கள், தமிழகத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றிய கீழடி மக்கள் ஆகியோருக்கு ரோட்டரி கிளப் ஆப் மிட் டவுன் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்   பண்பாட்டுக் கழகம் மதுரையில் கீழடியின் மாதிரி ஒன்றை உருவாக்கி சிறப்பு மாநாட்டி னை நடத்தியது. அவர்கள், கீழடி ஆய்வுகள் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டுமென வலியுறுத்தி இம்மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக,  மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள், சமூக ஆர் வலர்கள், தொல்லியல் அறிஞர்கள் மற்றும் மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுத்துறை அமைச்சர் ம.பா.பாண்டியராஜன், தொல்லியல் துறை இயக்குநரும் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியருமான த.உதயச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம ளித்து வருகின்றனர். 

கீழடி ஐந்தாம்கட்ட அகழாய்வை வந்து பார்வையிட்டபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தனர்.

தற்காலிக கண்காட்சியகம்

இந்த நிலையில் கீழடியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தற்காலிக கண்காட்சி யகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்க முதலாவது தளத்தில் இரண்டு அறைகளில் அமைக்கப் பட்டுள்ளன.  மக்கள் பார்வைக்காக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் கீழடி கண்காட்சியகத்தை  திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மா. பா.பாண்டியராஜன், பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர். மதுரையில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வினய், தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

உரிய பாதுகாப்பு தேவை

ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட சில முக்கிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பானைகள்,  ஆட்டக் காய்கள், பகடைக்காய்,  தக்கிளி,  எலும்பு முனைகள் போன்ற நுண்ணியப் பொருட்கள் போதிய பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும். குறிப்பாக கண்காணிப்புக் கேமிரா பொருத்தப் படவில்லை. பொருட்களைப் பாதுகாப்பதற்கு போதுமான  ஏற்பாடுகள் இல்லை. இந்தவிஷ யத்தில் மதுரை மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பார்வையாளர்களுக்கு விளக்க மளிக்க ஊழியர்கள் நியமிக்க வேண்டும்.  அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்க ளின் 3-டி (முப்பரிமாண)  காணொலிக் காட்சி  மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்முன்னே பொருட்களை தொட்டுப் பார்ப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.12 கோடியில் அருங்காட்சியகம்  முதலமைச்சர் அறிவிப்பு

கீழடியில் 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளியன்று அறிவித்தார்.  சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு நாள் விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் முதலமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு என்று பெயரை மாற்றி அண்ணா சாதித்தார். கீழடி அகழாய்வு தமிழர் நாகரிகத்தை உலகிற்கே பறைசாற்றியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் 12.21 கோடி ரூபாயில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.