சென்னை, 26 ஜூலை- அமலாக்கத்துறையினர் தொடர்ந்த வழக்கு கேரள உயர்நீதி மன்றத்தில் நிலுவை யில் உள்ளதாகவும் தங்கள் நிறுவனமும் நிறுவனத்தின் தலைவர் எஸ். மார்ட்டின் அவர்களும் எந்த ஒரு சட்ட விரோத செயல்க ளிலும் ஈடுபடவில்லை என்றும் மார்டின் குழுமம் கூறியுள்ளது. வழக்கின் இறுதி தீர்ப்பு எட்டப்படாத சூழலில், பொது மக்களிடம் தவறான அனு மானங்களை ஏற்படுத்தவேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக் கொள்வதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. எஸ். மார்டின் மற்றும் அவர் சார்ந்த குழுமத்தினர் லாட்டரி விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொழிலை லாட்டரி ஒழுங்குமுறை சட்டத்திற்கு உட்பட்டு கேரளாவில் செய்து வருவதாகவும் தங்களது குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் 2018-19 ஆம் நிதியாண்டிற்கு ரூ. 300 கோடி அளவில் வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.50 லட்சத்தையும், கஜா புயல் மீட்பு பணிகளுக்கு ரூ. 5 கோடியையும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.