தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
சென்னை, பிப். 25- பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாட்டம் நடைபெறுவ தாக தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டா லின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செவ்வாயன்று(பிப்.25) அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாவது: மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவ டிக்கை - பொருளாதாரச் சீரழிவு, அடிமை அ.தி.மு.க அரசின் டாஸ்மாக் வியாபாரம் இவற்றால் ஈரோடு - நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழில் கடும் பாதிப்புக்குள் ளாகி, அதனை நம்பி இருந்த அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள கொடிய வறுமை நிலையை எதிர்கொள்வதற்காக, பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற நெஞ்சைப் பிளக்கும் செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் தொடர்கிறது. பெண்க ளின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி, குடும்பங்களில் வன்முறையை விதைக்கும் இந்த அவலம் எப்போது முடிவுக்கு வரும்? பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பாது காப்பு நாள் கொண்டாடுவோர் இந்த விவ காரத்தின் மீது உண்மையான அக்கறை யைச் செலுத்துவார்களா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.