சென்னை, ஜூன் 28- மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கல்வி அலுவல கத்தில் பணியாற்றும் ஊழியர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான கல்வி அலுவலகங்கள், பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 3 ஆண்டு களுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரும் பணியாற்றக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளைக் கடந்து பணியாற்றும் தட்டச்சர்கள், இளநிலை உதவி யாளர்கள் உள்ளிட்டோரை கட்டாய பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை 29ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் விருப்பக் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க அனைத்து மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்கள், முறைகேடுகளை தவிர்ப்பதற்காகவே கட்டாய பணியிட மாற்றம் வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.