சென்னை, நவ. 7- உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், தேர்தலை நடத்து வதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்ப டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வியாழனன்று(நவ.7) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 2வது முறை யாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோ தனை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச் சாவடி இறுதி செய்தல், தேர்தலுக்கு தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்தல், தேர்தல் அலுவலர்கள் நியமனம் குறித்து ஆலோ சிக்கப்பட்டது. அப்போது மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 700 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்தும், அந்தந்த மாவட்டத்தின் நிலவரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் மாநில தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார்.