tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம்

சென்னை,ஜன.23- மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில், தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க 3 வார காலம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு வியாழனன்று(ஜன.23) விசாரணைக்கு வந்த போது, தமிழக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் மாநகராட்சி, நகராட்சிகளுக் கான தேர்தலை நடத்துவது குறித்து பதிலளிக்க நான்கு வார கால அவகாசம் கோரப்பட்டது. ஏற்கனவே 4 வருடங்களாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தொடர்ந்து அவகாசம் கோருவதை ஏற்க முடியாது, எனவே கால அவகாசம் வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு 3 வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

;