tamilnadu

img

ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது: அமைச்சர்

சென்னை,டிச.15- ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள் ளாட்சி பதவிகள் செல்லாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர் தல் பதவிகள் சில பகுதிகளில் ஏலம் விடப்படு வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.விருது நகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள கிரா மத்தில் உள்ளாட்சி பதவியை  ஏலம் விடு வதை எதிர்த்த வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் செய்தி-விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் ராஜு செய்தியாளர்கடம் கூறுகையில், அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும்.  உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது என்று தெரிவித்தார்.