tamilnadu

img

போடி மலைகிராமத்தில் ஆடுகளை கொன்ற சிறுத்தை புலி

பொதுமக்கள் பீதி

தேனி, நவ. 13    போடி மலை கிராமத்தில் புதன் கிழமை அதிகாலை சிறுத்தை புலி பல ஆடு களை தாக்கி கொன்றதால் பொதுமக்கள் பீதி யடைந்துள்ளனர். போடி மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது முந்தல் மலை கிராமம். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் கிராம மக்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.  இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் இங்குள்ள வீட்டிலிருந்த வளர்ப்பு நாய் மர்ம மிருகத் தால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தது.

கிராம மக்கள் விசாரித்த தில் சிறுத்தை தாக்கிய தற்கான தடயங்கள் தென் பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  இந்நிலையில் புதன் கிழமை முந்தல் சோதனை  சாவடி அருகே ஆடுகள் வளர்த்து வரும் பிச்சைமணி என்பவரது ஆட்டு கொட்டகையில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை காணவில்லை. பகலில் தேடியபோது பல ஆடுகள் மர்ம மிருகத்தால் தாக்கி ஆங்காங்கே இறந்து கிடந்தது தெரிந்தது. இப்பகுதியில் சிறுத்தையின் கால் தடயங்கள் தெரிந்தன. இதுகுறித்து வனத்துறை யினருக்கு விவசாயிகள் மீண்டும் தகவல் தெரிவித்த தன் பேரில் வனத்துறையினர் அங்கு வந்து விசாரித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் இதே பகுதியில் சிறுத்தை புலி தாக்கி பல ஆடுகள் இறந்து  போனது. தற்போது மீண்டும்  சிறுத்தை புலியின் நட மாட்டத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.