tamilnadu

img

கர்நாடக மாநில சிஐடியு தலைவர் எஸ்.வரலட்சுமி கைது: அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்க முயற்சி

பெங்களூரு, பிப். 3- சிஐடியு கர்நாடக மாநிலத் தலைவர் எஸ்.வரலட்சுமியை காவல்துறை கைது செய்துள்ளது. அங்கன்வாடிகளில் மதிய உணவு வழங்குவதை தனியார் முகவர்களிடம் ஒப்படைக்கும் முடிவை மேற்கொண்டுள்ள எடியூரப்பா அரசுக்கு எதிரான போராட்டம் துவங்கவிருக்கும் நிலையில் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. பெங்களூருவில் சிஐடியு மாநிலத் தலைவர் எஸ்.வரலட்சுமி தலைமையில் அங்கன்வாடி ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போராட்டம் துவங்குவதற்கு முன்பே வரலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆயிரக்கணக்கான ஊழியர் களின் வேலையை பறிக்கும் நடவடிக்கையை  எடியூரப்பாவின் பாஜக அரசு மேற்கொண்டுள் ளது. போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோரிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் கர்நாடக அரசு முன்வரவில்லை. எப்படியாவது இந்த திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண் டும் என்பதை இந்த அரசு நோக்கமாக கொண்டுள் ளது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தை ஒடுக்கும் மாநில பாஜக அரசின் நடவடிக்கைக்கு பல் வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.