tamilnadu

img

காஞ்சிபுரம் கோவிலில் ‘வடகலை - தென்கலை’ மோதல்

காஞ்சிபுரம்,நவ.6- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.  வரதராஜ பெருமாள் கோவிலில் புதனன்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி சாத்துமுறை சிறப்பு உற்சவம் நடைபெற்றது.  அப்போது தென்கலை ஐயங்கார் கள் பிரபந்தங்களை பாட முயற்சித் தனர். அப்போது, நீதிமன்ற தடை உள்ளதால், பிரபந்தங்களை பாடக் கூடாது என் வடகலை ஐயங்கார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் வடகலை, தென்கலை பிரிவினரி டையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தாசில்தார்,கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். சன்னதியில் வைத்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடும் வாக்குவாதம் நடை பெற்றது. மேலும் இரு தரப்பினரும் போட்டி போட்டு ஆவேசமாக பாடினர்.   ஒவ்வொரு முறையும் இதுபோல் மோதல் நடைபெறுவதால்  பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.