தஞ்சாவூர், ஆக.16- காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக, கல்லணை நீர் 17-ம் தேதி திறக்கப்படுகிறது. காவிரி நீர் வெள்ளிக்கிழமை காலை திருச்சி முக்கொம்புவிற்கு வந்தடைந்த நிலையில் அங்கிருந்து திறக்கப்பட்டு கல்லணையை எட்டியது. இதற்காக கல்லணையில் உள்ள 116 ஷட்டர்களும் தயார் செய்யப்பட்டும், அணைகள் முழு வதும் வர்ணம் பூசி வைக்கப் பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக, 17ம் தேதி காலை 11 மணிக்கு கல்லணை யிலிருந்து, காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில், தண்ணீர் திறந்து விடப்படுகிறது.