tamilnadu

img

கொரோனா எல்லோரையும் தாக்கும் அபாயமுள்ளதா?- இல.சண்முகசுந்தரம்

சார், எனக்கு தும்மல் வருகிறது, கொரோனா எனக்கும் இருக்குமோ சார்? இப்படி ஒருவர் கேட்கிறார்.
மேடம், படியில் ஏறி இறங்கும்போது  சாதாரணமா மூச்சுவாங்கும் எனக்கு, இப்போ அதிகமா மூச்சு வாங்கு, சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டிருக்குமோ? இது ஒருவரின் கேள்வி.
வயசானவங்களுக்கு வரும்கிறாங்களே எனக்கும் வருமா மேடம், எனக்கு 61 வயசாகுது? இது பயம்.

காய்ச்சலடிக்கிற மாதிரியே நாலு நாளா இருக்கு சார், நானும் என்னவெல்லாமோ செஞ்சுதான் பாக்குறேன், குறைகூற மாதிரியே தெரியலே சார்? ஒருவரின் பதட்டம் இது.
ஒரு குழந்தைக்கு மூச்சு திணறல் வந்த மாதிரி வீடியோ பார்த்தேன் மேடம், குழந்தைகளை எப்படிப் பத்திரமா பாத்துக்குறது மேடம்? இது ஒரு தாயின் அச்சம்.

    சுவாச மண்டலப் பிரச்னைன்னு சொல்லுறாங்களே  மேடம், எனக்கு பல வருசமா சைனஸ் இருக்கு, எனக்கும் ஆபத்திருக்கா மேடம்? ஒருவரின் சுய புலம்பல்.
    இப்படிப் பலவாறாக பலருக்கும் பயம் இருக்கிறது. அதை ஒரே கேள்வியாய் எழுப்பிப் பதில் எழுத முயற்சிக்கிறேன். பயம் அறவே வேண்டாம், இப்போதைக்கு சமூக விலகலென அரசுக்கு முழு ஒத்துழைப்பு என்ற அன்பு வேண்டுகோளுடன் எழுதுகிறேன்.

    பிறர்க்கும் பயன்படுமெனில், பகிர்ந்துகொள்ளுங்கள்…

1.    உலகெங்கும் பரவும் வாய்ப்புள்ள நோயென்பது உண்மைதான். ஆனால், உலகம் முழுவதுமுள்ள நூறு சத மக்களுக்கும் பரவாது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  

2.    இங்கு இரு சொற்றோடர்களையும், வார்த்தைகளையும்  நாம் அறிவது அவசியம். வாய்ப்பு CHANCE மற்றும் சந்தர்ப்பம் POSSIBILITY ஆகியவை ஒரே மாதிரியான அர்த்தம் தரும் அதே நேரத்தில் இருவேறு விளக்கமும் தரும் வார்த்தைகளாகும்.

3.     இந்த இரு வார்த்தைகளையும் பொதுவான வாய்ப்பு மற்றும் தனிப்பட்ட சந்தர்ப்பம் எனும் இரு வாக்கியங்களாய் மாற்றிப்பாருங்கள். ஒரு வேறுபாடு புரியும்.

4.    வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான பொதுவான வாய்ப்பு  உலகெங்கும் இருந்தாலும், ஒருவரின் தனிப்பட்ட சந்தர்ப்பமே அதைச் சாத்தியமாக்குகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாதல்லவா.


5.    ஒத்துக்கொள்கிறீர்கள்தானே. சரி, ஒருவரின் தனிப்பட்ட சந்தர்ப்பம்  எது தெரியுமா? எந்நேரமும் வைரஸ் தொற்று நோய்க்கு பாதிக்கப்படும் அளவுக்கு ஒருவர் தனது உடலை கவனமின்றி வைத்திருப்பாரெனில், அதுவே அம்மனிதருக்கு நோய் பரவுவதற்கான தனிப்பட்ட சந்தர்ப்பமாகும்.

6.    இப்படியும் சொல்லலாம். ஒருவருக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு ½ மட்டுமே ஆகும். அதாவது வரலாம், வராமலும் போகலாம். ஆனால், அந்நோய் வருவதற்கான வாய்ப்பு ஏதோ ஒன்றைச் சார்ந்திருக்கிறதல்லவா, அதைத்தான் சார்பானது என்றும் தனித்துவமானது என்றும் சொல்கிறோம். அது நபருக்கு நபர் வேறுபடும். 

7.    அதாவது, எவர் ஒருவர் தன் உடலில் வைரசுக்கான தீனியை ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கிறாரோ அந்த உடலானது வைரசால் பாதிக்கப்படும் என்பதே தனிப்பட்ட சந்தர்ப்பம் என்பதன் அர்த்தமாகும். ஒருவருக்கு நோய் பரவுவது என்பது அவரது உடலின் நிலையைச் சார்ந்ததாகும்.  

8.    ஏன் அப்படிச் சொல்லுகிறேன் தெரியுமா? ஒருவரது உடலில் இருந்து வைரஸ் வெளியேறி  14 மணி நேரத்தில் எந்த உடலும் அதற்குக் கிடைக்கவில்லையெனில், அது இறந்துவிடும் என்பதை நம்புகிறீர்கள்தானே..!

9.    அப்படியெனில் என்ன அர்த்தம்? ஒரு வைரசுக்கு 14 மணி நேரம் எந்தத் தீனியும் கிடைக்கவில்லையெனில் அது இறந்துவிடும், சரிதானே. அப்படியெனில்,  அதிகம் தீனியில்லாத ஒரு உடலில் அந்த வைரசால் நீண்ட நாள் வாழமுடியுமா?  மீண்டும் பரவமுடியுமா? 

10.    தீனியென்பது எது தெரியுமா? நுண்ணுயிரிகள் என்றாலே கழிவைத்தின்றுதான் உயிர் வாழுமென்பதை நாம் அறிவோம். ஆக, எந்த உடலில் கழிவுகள் அதிகமிருக்கிறதோ, அந்த உடலினுள் புகும் வைரஸ் அங்கு பல்கிப் பெருகிறது. அந்த உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்குமெனில், மீண்டும் வெளியேறிப் பரவுமளவுக்கு வைரஸ் வீரியம் பெறுகிறது. 

11.    இல்லை சார், அது கொடிய வைரஸ் சார், உள்ளே போன உடனேயே தொண்டையை பாதிக்கச் செய்து, சுவாச மண்டலத்தையே பாதிக்கச் செய்து கொன்றுவிடும் சார். அதனால்தான், மூச்சு திணறு சார், வென்டிலேட்டர் தேவைப்படுகிறது என்று விரிவாக விபரம் தெரிந்தோர் போல் அலட்டிக்கொண்டு யாரேனும் சொன்னால் அவரிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேளுங்கள்.

12.    அப்படியெனில், 80 சதமான நோயாளிகள் எந்த மருந்தும் இல்லாமல் குணமாவதாக இந்திய மருத்துவக் கழகம் சொல்வது பொய்யா? கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போர் (mortality rate of coronavirus) என்பது வெறும் 2% மட்டும்தான்.  அதுவும்கூட, இதயநோய் பாதிப்பு, ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற நோய்கள் இருப்பவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வயது முதிர்ந்தோர் ஆகியோருக்குத் தான் இறப்புக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, மற்றவர்கள் அச்சப்படத் தேவை இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  சொல்வது பொய்யா எனவும்

கேளுங்கள்.

13.    ஆம். எந்த வைரசாக இருந்தாலும் அது எல்லோரையும் பிடிப்பதுமில்லை. எல்லோரையும் கொல்வதுமில்லை. யாரைப் பிடித்தாலும் சரி, முதலில்  ஒரு வாரம் அவரது உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியின் எதிர்ப்பை அது சமாளித்தே ஆகவேண்டும். ஏற்கனவே, சொன்னதுபோன்று, அவரது உடலில் அந்த வைரசுக்கான உணவான கழிவை அவர் சேர்த்து வைத்திருந்தாரென்றால், அப்போது அவரது உடல் திணறும்.

14.    ஏனெனில், கழிவு அதிகமாக இருக்குமந்த உடலில் நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும். அப்போது அவருக்கு காய்ச்சலும், சளியும் இருக்குமெனில் பசியும் இருக்காது. அசதியும் அதிகம் இருக்கும். அவரால், சுயமாக இயங்கவே முடியாது. அந்த நிலையில் அவர் எதையும் சாப்பிடாமல் தனித்திருந்து ஓய்வெடுக்கவேண்டும். சாப்பிடாமல் தூங்கி நன்றாக ஒய்வெடுத்தால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். அவரது உடல் அந்த வைரசுக்கு எதிராகப் போராடி வெல்லும்.

15.    இப்போது இன்னொரு சந்தேகமும் சிலருக்கு ஏற்படலாம். சார், கழிவு எல்லோரது உடலிலும் எப்போதும் இருக்கத்தானே செய்யும். அப்படியெனில், வைரஸ் எல்லோரையும் தாக்கும்தானே என்றும் கேட்கலாம். நியாயமான சந்தேகம்தான். எல்லோரது உடலிலும் கழிவுகள் இருப்பினும் அதில் சிலருக்கு ஆபத்தான கழிவுகள் இருக்கும் என்பதே யதார்த்தமாகும். 

16.     உதாரணத்துக்கு, சாதாரணக் கழிவுகள், நாள்பட்ட தேங்கிப்போன கழிவுகள், கெட்டுப்போன இரசாயனக் கழிவுகள் என  மூன்றாகப் பிரித்துக்கொள்வோம். சாதாரணக் கழிவுகள் எல்லோருக்கும் இருக்கும். நாள்பட்ட கழிவும் பெரும்பாலோருக்கு இருக்கும். சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு, புண்… போன்ற வழிகளில் உடலே இக்கழிவை வெளியேற்ற முனையும். அப்போது அதையும் ஒருவர் அடக்கிக் கட்டுப்படுத்துகிறார் அல்லவா. செயற்கை இரசாயனங்கள் சேரும் அச்சூழலில்தான் அது கெட்டுப்போன கழிவுகளாக மாறுகிறது.  இந்த மூன்றாவது நிலையில் உள்ளவர்களைத்தான் நாம் நாள்பட்ட நோய் கொண்ட நோயாளிகள் என்கிறோம். மற்றபடி, மற்ற இருவகையான கழிவுகளையும் கொண்ட உடலானது வைரசை எதிர்க்கும் சக்தியை நிச்சயம் போதுமான அளவுக்குக் கொண்டிருக்கும். 

17.    இதைத்தான் எண்பது சதமான நோயாளிகள் தாமாகக் குணமாகுகிறார்கள்,  அப்படியே, கொரோனாவால் கடுமையாய் பாதிக்கப்பட்டாலும் சிகிச்சையில் பெரும்பாலும் குணமாகிவிடுகின்றனர்  என அரசும், மருத்துவர்களும் அடிக்கடி சொல்லி நம்பிக்கையூட்டுகின்றனர். 

18.    நீரழிவு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோயுடையோர் பலரும் தங்களது வாழ்வியல் குறைபாடுகளால் அதிகக் கழிவை உடலில் சேர்த்து வைத்திருக்கின்றனர். அத்தோடு அவர்கள் சாப்பிடும் மருந்தும் முக்கியக் காரணமென்கிறது அமெரிக்காவில் நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்று. ஆதாரம். தினமலர். 2020, மார்ச்.25


19.    மதுரையில் இறந்துபோன முதியவரும் கட்டுப்பாடில்லாத நீரழிவு, கட்டுப்பாடில்லாத இரத்தக்கொதிப்பு உள்ளவராம். அத்தோடு ஸ்டீராய்டை சார்ந்திருந்த நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயாளி என்கிறது தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் டிவிட்டர் பதிவு. ஆதாரம். THE HINDU. 2020, மார்ச்,26.


20.    மார்ச்.26 மாலை கணக்குப்படி 718 பேர் பாதிப்பு மற்றும் 14 பேர் மரணமென்கிறது செய்திகள். மரணமடைந்தோர் முதியவர்கள் என்கின்றன செய்திகள். இத்தாலி, ஸ்பெயினில் முதியோர் இல்லங்களில் நிகழ்ந்த மரணங்களே நம்மை அச்சுறுத்தின.  ஆக, அனைவருக்கும் அச்சம் தேவையில்லையே. அரசு சொல்லும் சமூக விலகல் என்பது நோயின் பரவலைக் குறைக்கவே ஆகும்.  இதில் அச்சமெதற்கு?

அரசுக்கு ஒத்துழைப்போம்.
அச்சமின்றி இருப்போம்.