நாகர்கோவில்,அக்.17- தமிழகத்தில் ஆண்டுக்கு 270 கோடி ரூபாய்க்கு கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதை 300 கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் விரிவாக்கப்பட்டுள்ள தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க காட்சியறையை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கைத்தறி ஆடைகள் தேக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிற ஒரு மனிதர் சீமான். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து அவர் கூறிய கருத்துக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக வில் சேர்ப்பது குறித்து சசிகலா வந்தபிறகு பேசிக்கொள்வோம் என்று தெரிவித்தார்.