tamilnadu

img

சீனாவிடமிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சென்னை, ஏப்.15- கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்வது உள்ளிட்ட  பல்வேறு விவகாரங்களில் சீனாவின் படிப்பினையை இந்திய அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி யின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கெரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து சீனா பெருமளவு மீண்டு வந்தபோதும், அலட்சியமாக இல்லாமல் தொடர் நடவ டிக்கைகளை மேற்கொள்கிறது. எனவே அந்நாட்டிடமிருந்து, கரோனா குறித்த படிப்பினையை இந்தியா கற்க வேண்டும். கொரோனா வைரஸை எதிர்த்து மாநில  அரசுகள் கடுமையாக  போராடி வருகின்றன.

 ஆனால் மத்திய அரசு பிரதமர் அலுவல கத்தில் அதிகாரத்தைக் குவித்துவைத்துக் கொண்டு மாநில அரசுக ளைச் சுதந்திர மாகச் செயல்படவிடாமல் தடுத்து வரு கின்றது. 10 லட்சம் பேரில் 21 பேருக்கு சோதனை  செய்கிற வசதிதான் இந்தியாவில் உள்ளது. தற்போதைய சூழலில் 10 ஆயிரம் மக்க ளுக்கு 8 மருத்துவர்கள் தான் இந்தியா வில் உள்ளனர். ஆனால் இத்தாலியில் 41,  கொரியாவில் 71 என்கிற அளவில் இருக்கி றது. மேலும் 55 ஆயிரம் மக்களுக்கு ஒரு அரசு மருத்துவமனை தான் இருக்கிறது.

இத்தகைய குறைவான கட்டமைப்பு இருப்பதால் தான் தமிழ்நாட்டில் ஒரு  லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தனி மைப்படுத் தப்பட்டுள்ளனர். கடந்த 20  நாள்களாக அவர்களுக்கு நோய் இருக்கி றதா, இல்லையா என்பதை பரிசோதிக்க முடியாத அவல நிலையில் தமிழ்நாடு அரசு  இருக்கிறது.

சீனாவிலிருந்து துரித சோதனை கருவி  (ரேபிட் டெஸ்ட் கருவி) வரும், வரும் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை வந்த பாடில்லை. இந்நிலையில் அச்சம், பீதியோடு மன உளைச்சலில் லட்சக்கணக் கான மக்கள் தவித்து வருகிறார்கள். இனியாவது போர்க்கால நடவடிக்கை எடுத்து கொரோனா நோயை வீழ்த்துகிற முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.

 

;