tamilnadu

img

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 பேராக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 பேராக  உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றவாது நிலையான சமூக பரிமாற்றம் என்ற அபாய கட்டத்திற்கு செல்லவில்லை. உள்ளூர் பரிமாற்ற அளவில்தான் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

===
நாடெங்கும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமங்கள், தகுதிச் சான்றிதழ் ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

===
தமிழகத்தில் செவ்வாயன்று (மார்ச் 31) ஓய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு இரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

===========
கொரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தனி மருத்துவமனையாக   ஏற்படுத்தப்பட்டுள்ளது.

==============
ஊரடங்கு காரணமாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட எந்தவொரு தொழிலாளர்களிடமும் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

=================
கொரோனா வைரஸ் தடுப்பூசியை தங்கள் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.  சோதனை முடிந்தவுடன்,100 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என்று  கூறியுள்ளது.

===================
கோவிட் குணப்படுத்த வாய்ப்புள்ள 3 மருந்துகள் தயாராக உள்ளதாக ரஷ்ய விஞ்ஞான அகாடமியின் துணைத்தலைவரும், உயிரி மருத்துவ அறிவியல் பிரிவின் தலைவருமான விளாடிமிர் செயினின் தெரிவித்துள்ளார். 

==================
பொருளாதார வீழ்ச்சி காரணமாக  கிழக்கு ஆசியாவில் மேலும் 1.10 கோடி(11 மில்லியன்) மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

===============
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய மருத்துவப் பொருட்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. சீனா வழங்கிய பொருள்கள் மிகவும் நல்ல பொருள்கள். ரஷியாவும் நல்ல மருத்துவப் பொருள்களை வழங்கியது. மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறியுள்ளார்.

===================
உ யிரியல் இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் கொரோனா வைரஸ் பரவல்  விரைவில் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார்.

==================
அடுத்த இஎம்ஐ தவணை தேதி நாளை முதல் துவங்கும் நிலையில், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், கோட்டக் உள்ளிட்ட வங்கிகள் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளன.
=================

ஏர்டெல், பி.எஸ்.என்.எல். சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளன. ஏர்டெல்  ப்ரீபெய்டு பேக் முடிவடையும் காலத்தை ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். ஏப்ரல் 20 வரை, ப்ரீ பெய்டு காலத்தை நீட்டித்துள்ளது. 

=====================
தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆகியோர், மத்திய வேளாண் துறை உயர் அதிகாரிகளுடன், ‘வீடியோ கான்பெரன்ஸ்’  மூலம் ஆலோசனை நடத்தினர். ஏப்ரல் 2-க்குள்  தமிழக விவசாயிகளுக்கான நிவாரண நிதியை விடுவிப்பதாக, மத்திய அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். 

=====================
கேஸ் சிலிண்டர் டெலிவரி ஊழியர்கள், கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தால், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று  இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

====================
ஊரடங்கை முன்னிட்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, நெல் கொள்முதல் செய்யும் பணியை வாணிபக்கழகம் நிறுத்தியுள்ளது. 

==================
கொரோனா தொற்று நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான வெண்டிலேட்டர்கள், முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்பு சாதனங்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

===================
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பட  நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார்.

================
செவ்வாயன்று மாலை 4.45 மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.  தமிழகத்தில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம்  தெரிவித்ததாக கூறப்படுகிறது.

======================
ஊர் திரும்ப முடியாமல் இந்தியாவில் ஆங்காங்கே சிக்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்திட மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சிறப்பு இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

=================
இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் குவியலான பாதிப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

=================
ரஷ்யாவில் முதலில் பாதிப்பு குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில் செவ்வாயன்று ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மொத்த பாதிப்பு 2,337 ஆக அதிகரித்துள்ளது.

=====================
ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் அரசுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியிருப்பது போலியாக பரப்பப்படுகிற வதந்திகள்தான் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார்.

=============
பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வேகமாக சிகிச்சை அளிக்க உதவிடும் வகையில், இந்திய கடற்படையின் விசாகப்பட்டினம் தளத்தில் உள்ள மருத்துவர்கள், ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரிலிருந்து ஒரே நேரத்தில் 6 பேருக்கு அளிக்கும் விதத்தில் சிறிய அளவிலான கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

==================
அடுத்த 30 நாட்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு மிக மிக முக்கியமான நாட்கள் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

====================
பெல்ஜியத்தில் கொரோனாவுக்கு 12 வயது சிறுமி மரணடைந்துள்ளார். இது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது என்று குறிப்பிட்ட பெல்ஜியம் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் டாக்டர் இமானுவேல், உலகில் மிக குறைந்த வயது கொரோனா மரணம் இது என்றார்.

=====================
வெளிநாடு வாழ் இந்தியர்கள், நாட்டிற்குள் வந்ததால் தான் கொரோனா பரவியது என்று தவறாக முத்திரை குத்தாதீர்கள்; அவர்கள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள்; அவர்களை குற்றவாளிகளாக கருதி விடாதீர் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.