tamilnadu

img

சுதந்திர தினம்: கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை,ஆக.13- சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்றும் 75 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர மாக கண்காணிக்கப்படும் என்றும் காவல்துறை யினர் அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் சுதந்திர தின விழா ஆக.15 வியா ழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காஷ்மீர் பிரச்சனையையொட்டி, பயங்கர வாதிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்  கூடும் என்றும், இதனால் பாதுகாப்பு நடவடிக்கை களை பலப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் போலீஸ் பாது காப்பை பலப்படுத்தி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். சுதந்திர தின விழாவையொட்டி சுழற்சி முறையில் 1 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணி யில் ஈடுபடவுள்ளனர். சென்னையிலும் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா உரை நிகழ்த்துகிறார். இதை யொட்டி நடைபெறும் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிடுகிறார்.

சுதந்திர தின விழா நடைபெறுவதையொட்டி, சென்னை கோட்டை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு களை பலப்படுத்துவது குறித்து கூடுதல் ஆணை யர் தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. துணைஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், சென்னை கோட்டைக்கு 5 அடுக்கு காவல் பாதுகாப்பு உள்ளூர் காவலர்கள்,  கமாண்டோ படை காவலர்கள், அதிவிரைவு படைக் காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் காவலர்களை பாது காப்பு பணியில் ஈடுபடுத்துவது என்றும், கோட்டை  பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. கோட்டையில் ஏற்கனவே 60 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது. மொத்தம் 75 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஆளில்லா விமானங்கள் மூலமும் பாதுகாப்பு பணி கள் தீவிரப்படுத்தப்படுகிறது. இதுதவிர சென்னை முழுவதும் பாதுகாப்பு அரண் பலப்ப டுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா முடியும் வரை  வாகன சோதனை நடைபெறும். லாட்ஜ்கள் உள்ளிட்ட  தங்கும் விடுதிகளிலும் சோதனை தீவிரமாக்கப்படு கிறது.

;