மத்திய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஓசூர் பகுதியில் அதிகமாக உள்ள மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஆரம் பத்தில் 28 விழுக்காடு வரி விதித்தனர். சரியான புரிதல் இல்லை என்பதால் வரி செலுத்த காலதாமதமானது. அதற்காக 18 விழுக்காடு அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஒரு நிறுவனம் குறைந்தது ரூ.30 லட்சம் முதல் 60 லட்சம் வரைக்கும் கட்ட வேண்டியுள்ளது. இந்த அபராதத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்று திமுக உறுப்பினர் சத்யா வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.சி.சம்பத்,“உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை தேசிய அளவி லும் பாதித்தது. ஆனாலும், தமிழகத்தில் எந்த உற்பத்தி யும் பாதிக்கவில்லை என்றும் ஓசூர் சிப்காட்-2 வளாகத்தில் கடந்த ரூ.250 கோடி முதலீட்டில் 5 நிறுவனங்கள் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பின்னர் பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரிக் பைக் நிறுவனம் ரூ.635 கோடியில் புதிதாக தொழிற்சாலை அமைக்க உள்ளது என்றும் இன்னும் பத்தாண்டுகளில் ஓசூர் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாக மாற்றப்படும் என்றும் கூறினார்.