கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி காந்திநகரில் இருந்த நியாயவிலைக்கடை பணியாளர் தேன்மொழி காய்ச்சல் காரணமாக உயிரிழந்தால் அந்தவீட்டைதனிமைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து கண்காணிப்பில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கொல்லம்பாளைம் சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பணியாற்றிய தேன்மொழி என்பவர் கடந்தவாரம் காய்ச்சல் காரணமாக விடுமுறை எடுத்துள்ளார். விடுப்பு முடிந்து 23ந்தேதி பணியில் சேர்ந்த போதும் அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதனால் அவர் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அதனால் மீண்டும் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். விடுப்பில் என்றவர் அவரது சொந்த ஊரான சீனாபுரத்திலிருந்து தனது தாய் வீடான கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் தங்கி ஓய்வெடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை காய்ச்சல் காரணமாக எதிர்பாராது விதமாக உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு தகவலறிந்த சுகாதாரத்துறையினர் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு என்பதால் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தேன்மொழி ஈரோடு கொல்லம்பாளையத்தில் பணியாற்றி உள்ளதும் அங்கு அதிகளவு கொரோனா பரவியுள்ளதும் அதனால் கொரோனா பாதிப்பில் தேன்மொழி உயிரிழந்துள்ளாரா என்பதும் அப்பகுதிமக்களிடம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தேன்மொழிகாய்ச்சல் பாதிப்பில் இருந்தும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார். மருத்துவமனைக்கு சென்றால் தன்னை தனிமைப்படுத்திவிடுவார்களோ என்ற பயத்தில் இருந்த தேன்மொழி தற்போது உயிரிழந்துள்ளார். இது அப்பகுதிமக்களிடம் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேன்மொழி தங்கியிருந்த அவரது தாய் வீட்டின் வீதியில் உள்ள பொதுமக்களையும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர். அவரதுதாய் வீடும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.