tamilnadu

img

குரூப்-1 முறைகேடு வழக்கு: பிப்.12-ல் விசாரணை

சென்னை,ஜன.31- குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை பிப்ரவரி 12 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய குரூப்-4 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பதிவான வழக்கில் பலரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பலரை வலைவீசி தேடி வருகின்றனர். அண்மையில் டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம்  நடத் திய குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வெள்ளியன்று (ஜன.31) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் முன்பு வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், பெருமாள் ஆகி யோர் ஆஜராகி டி.என்.பி. எஸ்.சி., குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்தது. தேர்வுக்கு பயன் படுத்தப்படும் விடைத்தாள் வெளியாகியது குறித்து ஸ்வப்னா என்ற திருநங்கை தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பல மாதங்களாக இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் உள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

;