tamilnadu

அகதிகள் முகாமில் வசிப்போருக்கு உணவுப் பொருட்கள்

சிவகாசி, மே 8- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது ஆணைக்குட்டம். இங்குள்ள இலங்கை அகதிகள் முகாமில் 135 குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். ஊரடங்கு காரண மாக வேலையின்றி சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர்.  இந்த நிலையில், 135 குடும்பத்திற்கு  தேவையான ரூ.95 ஆயிரம் மதிப்பிலான பல சரக்குப் பொருட்களை பாரத ஸ்டேட் வங்கி  ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கினர். இந்நிகழ்வில் உதவிப் பொது மேலாளர் ஆப்ர ஹாம் செல்வின், ஊராட்சித் தலைவர் முத்து ராஜ், முன்னாள் மேலாளர் சந்திரராஜன், உதவி மேலாளர் வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;