tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக பறக்கும் படை

சென்னை,டிச.20- தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக பறக்கும் படை அமைக்கப்படவுள்ளது.  இரண்டு அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 3 பறக்கும் படைகள் அமைக்கப்படும். இவற்றில் முதன்மை பொறுப்பு அலுவலர், காவல்துறை அலுவலர்கள் இடம் பெறுவார்கள். நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளவரை பறக்கும் படைகள் 24 மணிநேர கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதற்றமான, பிரச்சனைக்குரிய வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல்  பாதுகாப்பு வழங்கப்படும்.வாக்குப் பதிவு நடவடிக்கைகள் ஒளிப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் மாவட்ட, மாநில அளவில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.