tamilnadu

img

பாத்திமா தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

 சென்னை,டிச.15- சென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவரின் மகள் பாத்திமா. சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த அவர், கடந்த மாதம் 9 ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவியின் செல்போனில், பேராசிரியர்கள் 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, தமது தற்கொலைக்கு அவர்கள்தான் காரணம் என தெரிவித்திருந்தது தொடர்பான ஆதாரம் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்கள், ஐ.ஐ.டி. பணி யாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், சென்னை யில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து, தற்கொலைக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார். இதேபோல் தில்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகி யோரையும் அவர் நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்பி ற்குப் பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய அப்துல் லத்தீப், பாத்தி மாவின் தற்கொலை குறித்த சிபிஐ விசாரணை நடத்தும் என அமித் ஷா உறுதியளித்ததாக குறிப்பிட்டி ருந்தார். இந்நிலையில், மாணவி பாத்திமாவின் தற்கொலை குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இதுவரை விசாரணை நடத்தி, தடயவியல் ஆய்வறிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அப்போது மாணவியின் செல்போனில் கைப்பற்றப்பட்ட ஆதாரம் உண்மையானது என அவர்கள் உறுதிபடுத்தியி ருந்தனர். இவ்வாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீ ஸாரின் விசாரணை இறுதி கட்டத்தை அடைந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாநில அரசால் பரிந்துரை செய்ய ப்பட்டுள்ளது. இந்த பரிந்து ரையை ஏற்று சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும் என கூறப்படுகிறது.

;