tamilnadu

img

காளையார்கோவிலில் 13 ஆம் நூற்றாண்டின் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர், டிச.21-  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவி லில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை, தஞ்சையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ள னர். தஞ்சாவூர் வரலாற்று ஆய்வாளர்களான சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன், முனைவர் பா.ஜம்புலிங்கம், ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன் ஆகி யோர், தஞ்சையில் உள்ள ஏடகம் அமைப்பு சார்பில் வரலாற்றைத் தேடி புதுக்கோட்டை, சிவகங்கை சென்ற பயணத்தில், சிவ கங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இரண்டு பாண்டியர் கால் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர். இதுகுறித்து மணி.மாறன் கூறியதாவது:

தலையலங்கானம்

சிவகங்கைக்கு கிழக்கே 18 கி.மீ, காரைக் குடிக்கு தெற்கே 30 கி.மீ தொலைவில் உள்ள காளையார்கோவிலின் பழமையான பெயர் கானப்பேரெயில், திருக்கானப்பேர், தலை யலங்கானம் என அழைக்கப்பட்டுள்ளது. வேங்கைமார்பன் என்ற மன்னனால் சங்க காலத்தில் ஆளப்பட்டு, பாண்டிய, நாயக்க, ராமநாதபுரம் சேதுபதி, சிவகங்கை மன்னர் களாலும் ஆளப்பட்டது. மருது சகோத ரர்களின் பலம் வாய்ந்த கோட்டையாக இருந்து, பின்னர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றிய பகுதியாகும். 

பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்க ளில் திருக்கானப்பேரும் ஒன்று. அங்குள்ள சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந் துள்ள ராஜகோபுரம் மருது சகோதரர்களா லும், சுந்தரேஸ்வரர் கோவில், காளீஸ்வரர் கோவில் கோபுரம் வரகுணபாண்டியனாலும் அமைக்கப்பட்டது. சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பேரெயில் என்ற அரண் அமைத்து சிங்களப்படைகளை வென்று ஆட்சி செய்த மன்னன் வேங்கைமார்பன். இம்மன்னன் காலத்தில் ஆழம் நிறைந்த அகழியும், மதில்களும், அடர்ந்த காவற்காட்டி னையும் உருவாக்கி பகைவர் எளிதில் கைப் பற்ற முடியாத அளவில், காளையார் கோவிலை அமைத்துள்ளார்.  கடைச்சங்க காலப் பாண்டிய மன்னன் விக்கிரபெருவழுதி, கானப்பேரெயிலைக் கைப்பற்றினான். கானப்பேரெயிலை சுற்றி இருக்கும் காடுகளின் அடர்த்தி தமிழக வர லாற்றில் முக்கியத்துவம் பெற்றது. புதுக் கோட்டை மாவட்டம் திருமயம் வரையிலும், திண்டுக்கல், அழகர்கோயில் வரையிலும் எல்லையாய் அமைந்துள்ளது.

13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

அங்குள்ள கண்மாயின் உள் பகுதியில், பிற்காலத்தில் மருதுபாண்டியர்களால் கட்டப்பெற்ற நாணயசாலைக் கட்டடம் பழு துற்று புதர் மண்டிக் கிடக்கின்றது. அதன் வாயிற்படியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த, உடைந்த நிலையில் உள்ள துண்டுக் கல்வெட்டு கண்டறியப்பட்டது.  இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.  இதை போன்று மற்றொரு பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது.  அதில், பாண்டியர் காலத் தில் வழங்கப்பட்ட திருவிடையாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வர லாற்று ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக் கும் புதிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.

மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் தங்களின் பெரும் படையினை இவ்வூரின் வழியே வழி நடத்தி ஈழம் சென்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கி.பி.,1325ல் வருகை தந்த அரபு நாட்டுப் பயணி திமிஸ்கி என்பார் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவர் தம் பயணக் குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஓர் ஊராக இவ்வூரினைப் பதிவு செய்துள்ளார்.