tamilnadu

img

மறைமுக தேர்தலுக்கான அவசரச் சட்டம் செல்லும்: உயர்நீதிமன்றம்

சென்னை, டிச.10- மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறை முக தேர்தல் நடத்த ஏதுவாக, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை ரத்து செய்ய மறுப்புத்  தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும், நக ராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக, கடந்த நவம்பர் 19ஆம் தேதி, தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதற்குத் தடை விதிக்க கோரி, விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திரு மாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களாகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடி யாது எனக்கூறிப் பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டம், அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரி விக்கப்பட்டிருந்தது. இந்த மனு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில்  செவ்வாயன்று(டிச.10) விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்க றிஞர், தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தில், மறைமுகத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்பதால், அரசியல் சட்டம்  மற்றும் ஜனநாயக விரோதமானது என வாதிட்டார். அப்போது, தன்னை குறிப்பிட்ட பதவிக்குத்  தேர்ந்தெடுக்க வேண்டுமெனக் கூறுவது சட்டப்படி யான உரிமைதானே தவிர, அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை இல்லை என நீதிபதி கள் விளக்கமளித்தனர். எனவே, நேர்முக தேர்தலை, மறைமுக தேர்த லாக மாற்றியதை ஜனநாயக விரோதமானது என்றோ, அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றோ கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதி கள், தொல். திருமாவளவன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

;