கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் அரவுக்காடு நில உரிமை மாநாட்டின் 50 ஆம் ஆண்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இரவு பகல் பாராமல் உழைத்தும் படுத்து உறங்க ஒரு இடம் இல்லையே என்று தவித்த மக்களை நிலச் சொந்தக்காரர் களாக்கிய போராட்டத்தில் பங்கேற்ற வர்களும், ரத்தசாட்சிகளின் குடும்பத்தி னரும், பயனாளிகளின் புதிய தலைமுறை யினரும் உணர்ச்சி பிரவாகமாய் 50ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அரவுக்காடு கோவில் திடலில் ஆயிரக்க ணக்கான மக்கள் அணிதிரண்டிருந்தனர். விவசாயிகள் சங்க தலைவராக அன் றைய அரவுக்காடு மாநாட்டில் பங்கேற்ற வர் பி.ராமச்சந்திரன் பிள்ளை. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினராக உள்ள அவர் அன்றைய போராட்ட நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அன்றைய அரவுக்காடு மாநாட்டு ஏற்பாடு களில் முன்னிலை வகித்த மூத்த தலை வர் வி.எஸ்.அச்சுதானந்தனின் செய்தி, விழாவில் வாசிக்கப்பட்டது.
1969ல் இஎம்எஸ் அரசு நிலசீர்திருத்த மசோதாவை நிறைவேற்றியது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கா ததால் அதை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சட்டத்தை எவ்வாறு அமல்படுத்த வைப்பது என்பதை தீர்மா னிக்க விவசாயிகள், விவசாய தொழிலா ளர் அமைப்புகளும், முற்போக்கு அமைப்புகளும் ஆலோசித்தன. அதன்படி 1969 டிசம்பர் 13,14 தேதிகளில் அரவுக்காடு கோயில் திடலில் மாநாடு நடத்தப்பட்டது. அதில் விவசாயிகள் சங்க தலைவர் ஹரிகிருஷ்ண கோனார், சிபிஎம் தலைவர்களான இஎம்எஸ், பி. சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். அரவுக்காடு மாநாட்டு அறைகூவலின்படி 1970 ஜன வரி ஒன்று முதல் அனைத்து மாவட்டங்க ளிலும் ஆயிரக்கணக்கான போராட்ட வீரர்கள் நிலங்களில் நுழைந்து உரிமை யை நிலைநாட்டினர். ஆலப்புழா காவா லத்து ஸ்ரீதரன், கள்ளிக்காட்டு நீல கண்டன், பார்கவி உட்பட மாநிலம் முழு வதும் இந்த நிலமீட்பு போராட்டத்தில் உயிர்நீத்த 18 பேர் ரத்த சாட்சிகளாயினர். அதன் விளைவாக மாநிலம் முழுவதும் சுமார் 37 லட்சம் பேருக்கு நிலம் கிடைத் தது.