tamilnadu

img

குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

சென்னை, பிப்.13- 9,882 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 19 ஆம் தேதி தொடங்குவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அந்த தேர்வில் 12  லட்சத்து 70 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற்றனர்.  அவர்களுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 19ஆம் தேதி  தொடங்க உள்ளது. தேர்வர்கள் அனைத்து சான்றிதழ்  களின் நகல்களையும் அரசு இசேவை மையங்கள் வழி யாக பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் பதிவேற்ற செய்ய  வேண்டும். கலந்தாய்வின்போது தேர்வர்களின் அசல் சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டு, பணிநியமன ஆணைகள்  வழங்கப்படும். தரவரிசைப்பட்டியல் அடிப்படையில்  கலந்தாய்வுக்கு சுமார் 11,500 பேர் அழைக்கப்பட்டுள்  ளனர்.  கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நாள் உள்  ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதம் தேர்  வர்களின் மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்.

;